ஸ்ரீ ராமகிருஷ்ண தேவரின் வாழ்வையும் வாக்கையும் மானுடத்திற்கு தந்த மகத்தானவர் ம - எனப்படும் மஹேந்திர நாத் குப்தர். தக்ஷினேஸ்வர தவ பூமியை விளக்கிய ம -, தவ சீலரை தரிசிக்கும் முதல் சந்திப்பு... வியப்பும் பரிதவிப்பும் பக்தியாய் பரவசமாய் மிளிர்கின்ற தெய்வ சாந்நித்தியத்தை ம -வுடன் நாமும் அனுபவிப்போமாக!