Solratha sollitom| Hello Vikatan

ஆப்பு வைக்கும் எடப்பாடி...ஆங்ரி பேர்டு அண்ணாமலை! | Solratha Sollitom-07/03/2023


Listen Later

* ராஜஸ்தானில் திருடர்களைப் பிடிக்கப்போன தமிழகப் போலீஸ் சிறைபிடிப்பு

* திமுக ஆட்சியை அகற்றுவதற்கு கலவரத்தை ஏற்படுத்த சிலர் சதி செய்து வருகின்றனர் - முக ஸ்டாலின் 

* கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் மாடால் விருபாக்ஷப்பா. மைசூரு சாண்டல் சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனத்திற்கு ரசாயனம் சப்ளை செய்ய ஒரு தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்க ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியபோது பெங்களூருவில் உள்ள எம்.எல்.ஏ.வின் அலுவலகத்தில் வைத்து, மாடால் விருபாக்ஷப்பாவின் மகனும், அரசு அதிகாரியுமான பிரசாந்த் கைது செய்யப்பட்டார்.

முன்ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையில், பா.ஜ.க. எம்.எல்.ஏ. மாடால் விருபாக்ஷப்பாவுக்கு ரூ.5 லட்சம் பிணை தொகை மற்றும் உத்தரவாதத்துடன் கூடிய நிபந்தனையின் பேரில் இடைக்கால ஜாமீன் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

* உ.பி பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உமாராவைக் கைது செய்ய தமிழக போலீஸார் டில்லியில் முகாமிட்டுள்ளனர். அவர் முன் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகினார். 'மார்ச் 20 வரை கைது செய்யக்கூடாது' என்றும் 'முன் ஜாமீன் வேண்டுமென்றால் தமிழக நீதிமன்றத்தை அணுகவேண்டும்' என்றும் உத்தரவிடப்பட்டது.* ராகுல்காந்தி வெளிநாட்டில் இந்தியாவை அவமானப்படுத்தியதாக பாஜக குற்றச்சாட்டு

* ஜப்பானில் பிறப்புவிகிதம் குறைகிறது

* தமிழ்நாடு பாஜகவின் மாநில நிர்வாகிகள் தீலிப் கண்ணன், அம்மு என்கிற ஜோதி, கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் இன்று எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். 

* 'நானும் தலைவன்தான்!' - ஜீப்பில் ஏறும் அண்ணாமலை


Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan