Hymn-From a prayer I learnt during my school days. இறை இயேசுவே, கிறிஸ்து இயேசுவே! உம் பணியாற்ற இதோ என் கைகள்; உம் வழிநடக்க இதோ என் கால்கள்; நீர் பார்ப்பது போல் பார்த்திட என் விழிகளை நான் தருகிறேன்; உம் மொழிதனைக் கேட்டிட என் காதுகளைத் தருகிறேன்; உம் புகழைப் பாடிட என் நாவினையும் தருகிறேன்; உம் அருள் என்னில் நிலைத்திட என் மனதினையும் தருகிறேன். என்னில் ஜெபித்துப் பணியாற்றும் இயேசுவே என்னில் நீர் எந்நாளும் வாழ்ந்திடவே எனில் என்றும் உம் அன்பு வளர்ந்திடவே எனை முழுதும் உமக்கு அர்ப்பணிக்கிறேன். ஆமென்.