By Vallikannan. A nationalised book. இது அக்கால பொதுவுடமை கருத்துக்கள் நிறைந்த புத்தகம். அக்காலத்தில் பல துயரங்களை சந்தித்த தொழிலாளர்களின் வாழ்க்கை முறையை அப்பட்டமாக காட்டி இருக்கிறது. தமிழக அறிவு சிந்தனையில் பொதுவுடமை கருத்துக்கள் பொங்கி வழிந்த காலத்தின் எழுச்சியையும் இங்கு காண முடிகிறது. ஏழைகளுக்காக துடித்த வல்லிக் கண்ணனின் கண்ணீரையும் இங்கே நமது உள்ளங்களில் உணர முடிகிறது. இன்றும் மாத சம்பளத்திற்கு பணிபுரிந்து தங்களது ஆசைகளை கட்டி மூட்டையாக வைத்து அதை போகி பண்டிகையில் எரிப்பது போல தினம் தினம் எரித்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான நடுத்தர குடும்பங்களுக்கும் இந்த புத்தகம் எழுச்சி ஊட்டுவதாக அமையும் கடவுளின் பெயரால் ஆயிரம் செலவழிக்கும் கூட்டங்களுக்கும் தாங்கள் செய்யும் தவறுகளை உணர்த்த இது உதவும். உழைக்கும் வர்க்கத்தினரின் மனதில் புரட்சி எண்ணங்களை ஊட்ட இப் புத்தகம் ஒரு கருவியாக அமையும். புரட்சி என்பது வன்முறையல்ல அது அறிவார்ந்த சிந்தனை. அறிவினை வளர்க்கும் சிந்தனை. உரிமையை பெரும் சிந்தனை. உண்மையை போதிக்கும் சிந்தனை. உண்மையான மகிழ்வினை உண்டாக்கும் சிந்தனை என்பதனை உணர்ந்து கொள்ள இந்த புத்தகமும் உதவி செய்யும்.