உபநிஷதங்கள் வாழ்வின் மர்மமான பல முடிச்சுகளுக்கு தீர்வாக அமைகின்றன சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டதனால் பல பேருக்கு இது புரியாமல் போகலாம் ஆனால் இதன் தத்துவங்கள் உணரக்கூடியவை வார்த்தைகளும் மொழிகளும் மனிதனின் புரிதலுக்காக உண்டாக்கப்பட்டனவே தவிர அதில் ஏற்றத்தாழ்வுகள் எதுவும் இல்லை இந்த சாந்தோக்கிய உபநிஷதம் கூறும் கருத்துக்களை தமிழில் தொகுப்பாக இங்கு கொடுக்கிறோம் இதனை உணருங்கள் கேட்டால் மட்டும் போதாது வாழ்வின் மர்ம முடிச்சுகளையும் இன்ப துன்ப வாயில்களையும் அடைக்கும் ஒரு சிறந்த மருந்தாக இது இருக்கும் .