மனித வாழ்க்கையில் வழிகள் என்பது மிக அவசியமான ஒன்று. அனேகர் தவறான வழிகளிலும் ஒருசிலர் நல்ல வழிகளிலும் சென்று கொண்டிருக்கிறார்கள். நமக்கான வழிகளை நாமே தெரிந்து கொண்டு நாம் அதில் பயணம் செய்யும்போது அதில் ஆயிரம் துன்பங்கள் வரலாம் ஆனால் கடவுள் காட்டும் பாதையில் நாம் நடக்கும்போது துன்பங்கள் வந்தாலும் துணையாளர் நம்மோடு கூட இருந்து அதில் தப்புவித்து நம்மை நடத்த வல்லவராயிருக்கிறார். ஆகையால் நம்முடைய சுய ஆசைகளை, சுய வழிகளை நாம் உடைப்போம் தேவ பாதையில் நடப்போம்..!
என்ன நண்பர்களே நம்முடைய பாதையில் நாம் நடக்கும் போது நம் பாதை சரி என்றுதான் நமக்குத் தோன்றும், முடிவில் தான் தெரியும் அதில் இருக்கும் ஆயிரம் பிரச்சினைகளும் கஷ்டங்களும் ஆனால் திரும்பி வர முடியாது ஆனால் கடவுள் காட்டும் பாதையில் நடப்போம் ஆனால் அதில் பிரச்சினைகள், போராட்டமும் இருந்தாலும் தேவன் அதை ஆசீர்வதித்து, ஆரம்பமாக அற்பமாக இருந்தாலும் முடிவை சம்பூரணமாக மாற்றித் தருவார் என்பது உண்மை. எனவே உங்க வழிகளை நீங்கள் மாத்துங்க தேவ பாதையில் நடங்க...!