இந்த உலக மனிதர்கள் யாரும் என்னை புரிந்து கொள்ளவில்லை என்று கவலையோடு அமர்ந்திருக்கிற தேவஜனமே.! நாம் தேவனை புரிந்து கொள்கிறோமா??? என்ற கேள்வியோடு கூட இந்த வசனத்தை நாம் கேட்போம். மனிதர்கள் நம்மைப் புரிந்து கொள்ளாவிட்டால் நமக்கு எவ்வளவு வேதனையும், கசப்பும், கஷ்டமும் ஏற்படுகிறது. அதுபோலத்தான் நம்மை நேசிக்கின்ற, நமக்காக ஜீவனைத்தந்த தேவாதி தேவனை நாம் புரிந்து கொள்ளாத போது அவர் கஷ்டபடுகிறவராய் காணப்படுகிறார். ஆகையால் கர்த்தரை புரிந்துகொள்வோம் கருத்தோடு வாழ்வோம்.