கண்ணுக்குப் புலப்படாத தூசி கண்ணில் விழுந்தால் எப்படி நம்மால் நிம்மதியாக இருக்க முடியாதோ அதுபோல நம்ப வாழ்க்கையில் நமக்குத் தெரியாத சில தவறுகள் பாவங்கள் நம்மை நேர்வழியில் இருந்து தடம் புரளச் செய்யும்
அப்படிப்பட்ட தப்பான வழிகளை நம்முடைய வாழ்க்கையில் சோதித்து அறிந்து அவைகளை நீக்கி நாம் வாழும்போது நாம் நன்மைகளைப் பெற்றுக் கொள்வோம்.
இதில் அனேக தன்னிடத்தில் இருக்கின்ற சிறு சிறு குறைகளையும் தவறுகளையும் சுட்டிக் காட்டும் பொழுதோ அல்லது பிறர் வெளிப்படையாக கூறும் போது அதை ஏற்பதில்லை மாறாக நான் தவறு ஒன்றும் செய்யவில்லை என்னிடத்தில் குறை இல்லை என்று கூறிக் கொண்டு சுற்றி திரிகிறார்கள்..
இதுபோல நாம் இருக்கக்கூடாது நம்மிடத்தில் கூறப்படுகின்ற குறைகளை நாம் திருத்திக் கொள்ள வேண்டும் திருத்திக் கொள்ளாவிட்டால் நம்முடைய வாழ்க்கை நேர்வழியில் அதாவது சரியான வழியில் செல்லாமல் தவறான வழியில் சென்று முடியும் என்பதை நாம் உணர வேண்டும்...
தவறுகளையும் பாவங்களையும் தவிர்ப்போம் தேவனோடு நடப்போம்..!