💖💖💖💖💐💐💐💐
*இசைஞானி இதற்கு முன்னும் சரி, பின்னும் சரி எந்த பாடலிலாவது இந்த அளவு காதலாகி கசிந்துருகி நெகிழ்ந்திருக்கிறாரா என அறிவுக்கு தெரியவில்லை.*
ஒவ்வொரு வார்த்தைகளையும் அவர் உச்சரிக்கும்போது உள்ளத்துக்குள் இருக்கும் ஜீவனின் மீதான நேசத்தை உலகில் உன்னதமான ஒரு ஆன்மா தெய்வீக குரலில் வெளிப்படுத்தும் தெய்வீகத்தை எப்படி, எந்த வார்த்தையால் அழைப்பது.?
How to name it...
" பாடல்கள் ஒரு கோடி
எதுவும் புதிதில்லை,
ராகங்கள் கோடி, கோடி
அதுவும் புதிதில்லை,
எனது ஜீவன் நீ தான்
என்றும் புதிது...."
எனும் வரிகளில் 'என்றும் புதிது' என்ற ஒற்றை வரியை கவனியுங்கள். இவரின் உள்ளத்து காதலின் மேன்மை புரியும்.
நேசிக்கும் நெஞ்சம்
எந்த அளவு நெகிழ்வுக்கு உள்ளாக்கியிருந்தால், இது போன்ற பாடலை எழுதி பாடிட முடியும்.?
ராசைய்யாவிற்குள் இருந்த அந்த உன்னத காதலால்தான் அவரின் இசை,,,
காதலிக்கும் அத்தனை உயிருக்குள்ளும் தன் ஆட்சியை செலுத்தி கொண்டிருக்கிறது.
அப்படி அவர் மனங்களை ஆளுவதால்தான் இத்தனை இதயங்களும் பழுதாகாமல்
இளமையாகவே இருந்து வருகின்றன.
*உயிரில் பாதியான இன்னொரு உயிரான* *ஜீவா அம்மாவிற்கு இசைஞானி*
*அளித்த சிறந்த பரிசாகவே*
*இந்த பாடலை நினைக்க தோன்றுகிறது.*
*அவர் உணர்வில் தன்னை*
*உருக விடும் அழகை,,* *இரு செவி கொண்டு இன்புற கேட்கலாம் என்றும், என்றென்றும்.*
*"இதயம் ஒரு கோவில்."*
(இதயக்கோவில்)