"பாடகியா இல்ல ஆசிரியரா என்ற நிலை வந்த போது, ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் டீச்சராவே இருந்து, முழு மனசோட வேலை செய்தேன்.. ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு இசையை கற்று தந்தேன் அப்படிங்கிற திருப்தி இருக்கு" என்கிறார் ஜென்சி. இந்த மனநிறைவான வார்த்தைகளை எத்தனை பேரால் சொல்ல முடியும் என்பது தெரியவில்லை.
இப்போது வரை ரசிகர்களால் ஜென்ஸியை மறக்க முடியவில்லை.. இவர் பாடல்களே அதிக தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், சன்னமான குரலில் இவர் பேச்சுக்களை கேட்டவர்களும் மிகக்குறைவுதான்.. இவரது ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ரசிகர்கள் மறக்காமல் வாழ்த்துக்களை கூற தவறுவதில்லை.. அந்த அளவுக்கு ரசிகர்களின் ஆன்மாவை தன்னுடைய 18 வயதிலேயே தட்டி எழுப்பி விட்டு சென்றவர் ஜென்ஸி.. திரும்பும் திசையெல்லாம் "காதல் ஓவியம், பாடும் காவியம்தான்"!! இசை பொக்கிஷங்களை திகட்டாமல் அள்ளி அள்ளி தந்த ஜென்ஸி, நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பதே கடைகோடி இசை ரசிகர்களின் நெஞ்சார்ந்த விருப்பம்!
🌹🌻🙏🌞🙏🌹🌻