04.10.2024 - By SBS
இலங்கையில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் நெருங்குகின்றது. மீள்குடியேற்றம், காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், காணி விடுவிப்பு, சிங்கள மயமாக்கல் என பல்வேறு பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வுகள் காணப்படவில்லை. இதேவேளையில், கிழக்கு மாகாணத்தில் மேய்ச்சல் நிலம் அபகரிப்புக்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. அதுபோல் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிரதேச செயலகத்திற்கு நிர்வாக அதிகாரம் கோரி மக்கள் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. இந்த போராட்டங்களுக்கு தீர்வுகள் இல்லாத நிலையில் போராட்டங்கள் தொடர்கின்றன. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.