மகா வல்லமை பொருந்திய கணம் பொருந்திய நம் தேவனின் வார்த்தைக்கு நாம் செவி கொடுக்க தயங்க கூடாது ...... ஏனெனில் தேவனுடைய வார்த்தைதான் நம்மை சீர்படுத்தும் ஸ்திரப் படுத்தும் பலப்படுத்தும் நிலை நிறுத்தும் ........... ஆகவே தேவன் நம்மில் வைத்த சித்தத்தை அவருடைய திட்டத்தை அவர் செய்து முடிப்பதற்கு நாம் தேவனின் சத்தத்திற்கு செவி கொடுக்க வேண்டும் .......... நாம் அநேக வார்த்தைகளை பேசுவதை விட தேவனுடைய வார்த்தைக்கு செவி கொடுப்பதே நலம் .......... என் பிதாவின் சித்தத்தை செய்து முடிப்பதே எனக்கு போஜனமாய் இருக்கிறது என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொன்னது போல ......நாமும் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சித்தப்படியே வாழ்ந்து அவர் நாமத்தை மகிமைப்படுத்த முயற்சி செய்வோம்................ நமது ஆவியில் பலப்பட ஆத்துமாவை சீர்படுத்துவோம் வல்லமையும் மகத்துவம் உடைய தேவ சத்தத்திற்கு கீழ்ப்படிவோம் ....ஆமேன்