பாரத நாட்டின் உயர்நிலை என்று சொல்லப்படும் பெருமை உடையவை உபநிடதங்கள் வேதங்களின் முடி அல்லது முடிந்த முடிவாக திகழ்கின்றன இவை ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற மூதுரையும் உபநிடதங்களும் உண்மை ஒன்றே அதன் வடிவங்களை நாம் எல்லாம் என்று உலக வாழ்க்கையின் ரகசியத்தை எடுத்துக்காட்டி நம்மை நெறிப்படுத்துகின்றன. பார்க்கும் இடம் தோறும் எல்லாவற்றிலும் நீக்கமர நிறைந்திருப்பது இந்த செம்பொருள் ஒவ்வொரு உயிரிலும் உனக்கு அறிய நுண்ணுுணர்வாக தன்னை இனம் காட்டிக் கொண்டு விளங்குவதும் இந்த உண்மையே இதே பொது உண்மைதான் காக்கை குருவி எங்கள் சாதி என்று மகாகவி பாரதியை பாட வைத்தது எல்லா உயிரும் உண்மையில் ஓர் உயிர் என்றால் மனிதரும் தேவரும் விளங்கும் பறவையும் ஒரே இனம் என்று தானே பொருள் படும் இதனால் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உலகச் சமுதாயம் ஒன்று மொத்தமாக மலர்கிறது இதனை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கட உபநிஷதம் தெளிவாக எடுத்துக்காட்டி உள்ளது மேலும் வாழ்வின் பல உண்மைகளை அறிந்து கொள்ள இந்த ஒலிப் புத்தகத்தை கேட்கவும்.