Kadhaiya Kavithaiya

Maayathotram - Kavithai


Listen Later

தெருவெல்லாம் தேவதைகள் என்று
கண் விழும் மங்கைகள் யாவரையும்
கடைக்கண்ணால் ரசித்து விட்டு
கடந்திடும் சராசரி ஆடவன் நானடி
முதல் பார்வை முதல் காதல் என்று
சகாக்கள் சொல்ல கேட்டபோதிலும்
கேலி கிண்டல் செய்து விட்டு
காதல் போதை தெரியாத வயதுவந்த சிறுவன் நானடி
உடலென்ன மனம்மென்ன என்று
ஆராய்ச்சி ஏதும் செய்யாமல்
காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தமும் அறியாமல்
கண்மூடித்தனமாய் சுற்றி திரியும் மன்னன் நானடி
எதேச்சையாய் என் கண்முன் தோன்றி
பார்த்த நொடியிலேயே எனை நீ சிறைபிடித்தாய்
மறுபடி மறுபடி உனை நான் பார்த்திட
எந்தன் அட்ரலினையும் சுரக்க செய்தாய்
இதற்கு காதல் என்றொரு பெயரை
நானும் வைத்து கொள்ள
உன் நாணம் நானும் பார்க்கையிலே
இறக்கை கட்டி மேகம் தொட பறக்கிறேன்
தடுமாறாமல் பேசும் நாவும்
என்னைப் போலவே உன்னிடம் தடுமாற
பழகிய வார்த்தைகளும் என் கை விரல் போல
நடுநடுங்கி தான் போனது உன் மையிட்ட கண்கள் பார்த்து
தனியாய் நடந்த என் பாதங்களும்
உன் அன்னநடையுடன் ஒத்திசைவு பெறுகிறது
நடுங்கும் என் விரல்களை நீ பற்றுகையிலே
இதயம் சில நொடி வலுவிழக்கிறது
காதல் இது தான் என்று
என் வாழ்வில் நான் ஏற்கும் முன்னமே
என்னோடு முழுதாய் நீ கலந்து
என் ஆசையிலும் என் ஆயுளிளும்
என் மூச்சிலும் என் பேச்சிலும்
என் நடையிலும் என் உணர்விலும்
பிரிக்க இயலாத அனிச்சை செயலாய்
மூளையில் பதிந்து விட்டாய்
சில நொடியில் நான் செய்த மூடத்தனத்தினால்
உன் ஆயுள் முழுதும் எனை நீ வெறுக்க
மீண்டும் உன்னோடு கைவிரல் கோர்ப்பது
நிதர்சனத்தில் சாத்தியமில்லா கூறுகள் என
நரம்பு திசுக்களால் ஆன இந்த மூளை கூப்பாடு போட்டாலும்
சில நேரம் என்னை சமாதானம் செய்ய
மாயத்தோற்றமும் தருகிறது நீ இல்லை என்பதை மறைக்க...
...more
View all episodesView all episodes
Download on the App Store

Kadhaiya KavithaiyaBy Kadhaiya Kavithaiya