04.11.2024 - By SBS
இந்த ஆண்டின் தொடக்கத்தில் படகு மூலம் மேற்கு ஆஸ்திரேலியாவின் தொலைதூர பிராந்தியமொன்றை வந்தடைந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் குழுவொன்று, தற்போது நவுறுவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளநிலையில், தமது அனுபவங்கள் குறித்து மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் தற்கொலை எண்ணங்கள் உருவாவதாகவும் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.