Kadhaiya Kavithaiya

Oodal mudinthum Kadhal - Kavithai


Listen Later

இரு முறை அல்லது மூன்று முறை அவள் என் முகம் பார்த்திருப்பாள்
இருநூறு அல்லது அதற்கு மேலும் நான் அவள் முகம் பார்த்திருப்பேன்
அவள் அசையும் அங்கங்கள் யாவும் என் கண்களுக்கு அமிர்தமே...!
அவள் தட்டி ஒதுக்கும் கூந்தல் மயிரும்
மயிலிறகின் வர்ணனைக்கும் அப்பாற்பட்டது தான்...
அவள் மெல்ல சிமிட்டி சிமிட்டி பேசும் அழகும்
இடியோடு மின்னல் வந்து தாக்கும் உணர்வு தான்
அவள் ஈர உதடு ஒட்டி பிரியும் நொடியும்
நெஞ்சம் இங்கே வெளி வர துடிக்கும் நொடியும் ஒன்று தான்...
முகத்திலே இத்தனை ஆசைகள் உன் மீது வைத்தாலும்
மெல்ல நீ நடக்கையில் அங்கம் அசையும் அழகும்
மெல்ல மெல்ல என் புலன் சார்ந்த ஆசையும் தட்டி தான் செல்கிறது
கழுத்தணி முடியும் இடமும் அங்கு நீ ஒளித்து வைத்த அங்கமும்
இங்ஙனம் என் ரேகை அழித்திட தானா?
தூரம் இருந்து ரசித்த அவள்
அருகினில் வந்த பின்பு ரசிக்காமல் இருப்பது பாவம் இல்லையா?
ரசித்தேன்., அவள் ஒவ்வொரு அசைவையும்...
ரசித்தேன்., அவள் ஒவ்வொரு பரிவையும்...
ரசித்தேன்., அவள் ஒவ்வொரு ஆசையையும்...
கண்ணோடு கண் நோக்கின் காதல் ...
கழுத்தோடு கண் நோக்கின் காமம் ...
இங்கோ எனக்கு காமம் எல்லாம் கடந்த பின்பும்
காதல் உன் உடலின் மீதா? இல்லை உணர்வின் மீதா?
அங்கத்தில் ஆரம்பித்த காதல்
உன் குரல் கேட்டு ரசித்து பெருகிய காதல்
உன் விரல் தொட்டு கிளர்ச்சி அடைந்த காதல்
உன் மனம் அறிந்து, அங்கம் மறந்த காதல்
உன் ஸ்பரிசம் மறந்து உன்னில் திளைத்திருக்க செய்த காதல்
ஊடல் முடிந்தும் உன்னோடே வைத்திருக்கிறது
இதில் காதல் முடிந்து காமமா
காமம் முடிந்து காதலா!?
இரண்டும் ஒன்று தான் எண்ணில் நீ வினாவையிலே...
ஊடலும் நன்று தான் காதலும் நன்று தான்
இரண்டும் ஒருவளின் மேல் வருவதென்றால்
அந்த ஒருவள் அவள் மட்டும் தான்...
...more
View all episodesView all episodes
Download on the App Store

Kadhaiya KavithaiyaBy Kadhaiya Kavithaiya