மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் உந்தன் வாயில் மட்டே
இனமான சுற்றமும் மயான மட்டே வழிக்கே துணை
தினையாம் அளவு எள்ளளவாகிலும் முன்பு செய்த தலந்
தனையாள வென்றும் பரலோகஞ் சித்திக்கும் சத்தியமே. 7.
அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே, விழி அம்பு ஒழுக
மெத்திய மாதரும் வீதிமட்டே, விம்மி விம்மி இரு
கைத்தலம் மேல் வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டே
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே. 8.
மாடுண்டு கன்றுண்டு மக்கள் உண்டென்று மகிழ்வதெல்லாம்
கேடுண்டு எனும்படி கேட்டுவிட்டோம் இனிக் கேள் மனமே
ஓடுண்டு கந்தை உண்டு உள்ளே எழும் ஐந்தும் ஓதவுண்டு
தோடுண்ட கண்டன் அடியார் நமக்குத் துணையும் உண்டே. 9.வினைப்போகமே யொரு தேகங்கண்டால் வினைதானொழிந்தால்
நினைப்போதளவு நில்லாது கண்டாய் சிவன் பாதம் நினை,
நினைப்போரை மேவு, நினையாரை நீங்கி இந்நெறியினின்றால்
உனைப்போல் ஒருவருண்டோ மனமே எனக்குற்றவரே. 4.
வாதுற்ற திண்புய ரண்ணாமலையர் மலர்ப்பதத்தைப்
போதுற்றெப்போதும் புகலு நெஞ்சே இந்தப் பூதலத்தில்
தீதுற்ற செல்வமென், தேடிப் புதைத்த திரவியமென்,
காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே. 5.
வேதத்தின் உட்பொருள் மண்ணாசை மங்கையை விட்டுவிடப்
போதித்தவன் மொழி கேட்டிலையோ செய்த புண்ணியத்தால்
ஆதித்தன் சந்திரன் போலே வெளிச்சம் தாம்பொழுது
காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே. 6.கையொன்று செய்ய, விழியொன்று நாடக் கருத்தொன்று எண்ண
பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப் புலால் கமழும்
மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க விரும்பும் யான்
செய்கின்ற பூசை எவ்வாறு கொள்வாய் வினைதீர்த்தவனே! 1.
கண்ணுண்டு காணக், கருத்துண்டு நோக்கக், கசிந்துருகிப்
பண்ணுண்டு பாடச், செவியுண்டு கேட்கப், பல் பச்சிலையால்
எண்ணுண்டு சாத்த, எதிர் நிற்க ஈசன் இருக்கையிலே
மண்ணுண்டு போகுது ஐயோ கெடுவீர் இந்த மானுடமே! 2.
சொல்லிலும், சொல்லின் முடிவிலும், வேதச் சுருதியிலும்
அல்லிலும் மாசற்ற ஆகாயந்தன்னிலும் மாய்ந்து விட்டோர்
இல்லிலும் அன்பரிடத்திலும் ஈசன் இருக்குமிடம்
கல்லிலும், செம்பிலுமோ இருப்பான் எங்கள் கண்ணுதலே. 3.