Kadhaiya Kavithaiya

Siragillamalum Parakalam - Kavithai


Listen Later

கற்பனையில் பறந்த நாட்களை தான் ஒத்தி வைப்போம்
கனவினில் வின் சென்ற நிமிடங்களையும் தூரம் வைப்போம்
மனதில் ஆயிரம் வலிகள் இருப்பினும் மறைத்து வைப்போம்
இங்கு யாரோடு யார் சோகமும் பகிர்தல் என்பதே பொய் தான்
சில நேரம் கேளிக்கைகளுக்காக, சில நேரம் நம் கண்ணீர் கரைக்க மட்டுமே...
கேட்க காதுகள் இருப்பினும் நோக்கம் நேர்மை இருப்பினும்
சுமப்பது ஒரு மனது மட்டுமே
வழிகள் ஆயிரம் யாரும் சொல்லலாம்
கண் சிவந்து நீர் வற்றி போன பின்பு
மீண்டும் யோசித்து பாருங்கள்
உங்களுக்கு தேவையான வழி தானாக வரும்
ஒடிந்த சிறகுகள் மீண்டும் உயிர்பெறும்
ஓய்வில்லாமல் மீண்டும் படபடக்க தயாராகும்
கண்டம் தாண்டி செல்லும் பறவை போல
இளைப்பாற இடம் இல்லாது இருந்த மனமும்
நின்று உயிர் பெறும்
எல்லாம் நிதானம் வந்துத்தான் ஆக வேண்டும்
பட்டு போன மரம் இருந்து வரும் சிறு கிளை போல நம்பிக்கையும் வரும்
மனதோரம் செய்த சண்டைகள் முற்று புள்ளிகள் பெறும்
முகம் சற்று ஜொலிஜொலித்திடும்
கண்கள் சிவக்க வற்றிய கண் நீரும்
மெல்ல கண்களை கழுவ இயல்புக்கு திரும்பியிருக்கும்
ரசித்திடாத ஓசையும் காற்றின் கீதமும்
உதட்டோரம் புன்னகை பூக்க செய்திருக்கும்
நடுங்கிய கைகளும் சிறகுகள் போல திடம் பெற்றிருக்கும்
தடுமாறி நடந்த கால்களும் நிலையாக நின்றிருக்கும்
சில நொடி சிந்தித்து பார்க்கையில்
பலவற்றைத் தாண்டி வந்திருப்போம்
எதுவும் மறந்து மக்கி போகாது எனினும்
மெல்ல மெல்ல ஒரு ஓரம் ஒதுக்கி கடந்து வந்தே இருப்போம்
ஆசை கொண்ட மனதிற்கு நிராசை தான் பரிசு
அறிந்தும் அடுத்த ஆசை கொள்வோம்
சிறகுகள் மீண்டும் ஒடிந்தால் தான் என்ன
மீண்டும் பறக்கலாம் சிறகுகளே இல்லாமல்...
...more
View all episodesView all episodes
Download on the App Store

Kadhaiya KavithaiyaBy Kadhaiya Kavithaiya