
Sign up to save your podcasts
Or


இவர் பிறந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் என்னும் தலத்தை அடுத்துள்ள விக்கிரம சிங்கபுரம் என்னும் ஊர். இவர் பிறந்த குடும்பம் அகத்திய முனிவருடைய ஆசிர்வாதம் பெற்றது. இவரும் தம் காலத்தில் அகத்திய முனிவர் போல் தமிழிலும் வடமொழியிலும் பெரும் புலமை பெற்று விளங்கினார். இவருக்கு இளமையில் பெறறோர் இட்ட பெயர் முக்களாலிங்கர் என்பது. இப்பெயர் பாபநாசம் என்னும் தலத்து இறைவனுடைய திருநாமம். இவருடைய முன்னோர்கள் இத்தலத்து இறைவனிடத்துப் பக்தி பூண்டு ஒழுகி வந்தனர். இவருடைய சிறிய தந்தையார் சிறந்த கவிராயராக விளங்கினார். அத்தலத்து அம்பிகையாகிய உலகம்மையின் அருள் நிரம்பப் பெற்றவர். பாபநாசத்தலபுராணமும் விக்கிரமசிங்கபுரத்துச் சில சிற்றிலக்கியங்களும் செய்துள்ளனர். சிவஞானமுனுவருடைய தாயார் மயிலம்மை என்னும் பெயரினர். தந்தையார் ஆனந்தக்கூத்தர் என்னும் பெயரினர். இவருடைய குடும்பத்தினர் சிவபக்தி, அடியார் பக்திகளில் சிறந்து விளங்கினர். ஆதலின் சிவஞானமுனிவருக்கும் அப் பக்தி இயல்பாகவே இளம்பருவத்திலேயே வாய்த்திருந்தது.
By suresh babuஇவர் பிறந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் என்னும் தலத்தை அடுத்துள்ள விக்கிரம சிங்கபுரம் என்னும் ஊர். இவர் பிறந்த குடும்பம் அகத்திய முனிவருடைய ஆசிர்வாதம் பெற்றது. இவரும் தம் காலத்தில் அகத்திய முனிவர் போல் தமிழிலும் வடமொழியிலும் பெரும் புலமை பெற்று விளங்கினார். இவருக்கு இளமையில் பெறறோர் இட்ட பெயர் முக்களாலிங்கர் என்பது. இப்பெயர் பாபநாசம் என்னும் தலத்து இறைவனுடைய திருநாமம். இவருடைய முன்னோர்கள் இத்தலத்து இறைவனிடத்துப் பக்தி பூண்டு ஒழுகி வந்தனர். இவருடைய சிறிய தந்தையார் சிறந்த கவிராயராக விளங்கினார். அத்தலத்து அம்பிகையாகிய உலகம்மையின் அருள் நிரம்பப் பெற்றவர். பாபநாசத்தலபுராணமும் விக்கிரமசிங்கபுரத்துச் சில சிற்றிலக்கியங்களும் செய்துள்ளனர். சிவஞானமுனுவருடைய தாயார் மயிலம்மை என்னும் பெயரினர். தந்தையார் ஆனந்தக்கூத்தர் என்னும் பெயரினர். இவருடைய குடும்பத்தினர் சிவபக்தி, அடியார் பக்திகளில் சிறந்து விளங்கினர். ஆதலின் சிவஞானமுனிவருக்கும் அப் பக்தி இயல்பாகவே இளம்பருவத்திலேயே வாய்த்திருந்தது.