
Sign up to save your podcasts
Or


வடமொழியில் பிரமசூத்திரம் என்னும் வேதாந்த சூத்திரத்திற்கு சங்கரபாடியம் (இது அத்வைத பாடியம்) இராமாநுஜபாடியம் (இது விசிட்டாத்வைதபாடியம்) நீலகண்ட பாடியம் (இது சிவாத்வைத பாடியம்) எனப் பலபாடியங்கள் உள்ளன. அவ்வக் கொள்கையினர் அவ்வப்பாடியம் எழுதியவர்களைப் பாடியகாரர் எனச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.
சித்தாந்த சைவத்துக்குத் தமிழ்ச்சூத்திர நூலாகிய சிவஞான போத சூத்திரத்திற்குத் தமிழில் எழுதப்பட்ட ஒரே பாடியம் மாதவச் சிவஞான முனிவர் எழுதிய சிவஞான பாடியம் மட்டுமே உள்ளது. எனவே மாதவச்சிவஞானமுனிவர் சித்தாந்த சைவர்களால் பாடியகாரர் என மதித்துக் கொண்டாடத் தக்கவராக விளங்குகின்றார். இது பற்றியே இவருக்குத் திராவிட மாபாடிய கர்த்தராகிய மாதவச் சிவஞான முனிவர் எனப் பெயர் வழங்கி வருகின்றது. (இங்குத் திராவிடம் என்பது தமிழ் என்னும் பொருளில் கூறப்பட்டுள்ளது).
By suresh babuவடமொழியில் பிரமசூத்திரம் என்னும் வேதாந்த சூத்திரத்திற்கு சங்கரபாடியம் (இது அத்வைத பாடியம்) இராமாநுஜபாடியம் (இது விசிட்டாத்வைதபாடியம்) நீலகண்ட பாடியம் (இது சிவாத்வைத பாடியம்) எனப் பலபாடியங்கள் உள்ளன. அவ்வக் கொள்கையினர் அவ்வப்பாடியம் எழுதியவர்களைப் பாடியகாரர் எனச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.
சித்தாந்த சைவத்துக்குத் தமிழ்ச்சூத்திர நூலாகிய சிவஞான போத சூத்திரத்திற்குத் தமிழில் எழுதப்பட்ட ஒரே பாடியம் மாதவச் சிவஞான முனிவர் எழுதிய சிவஞான பாடியம் மட்டுமே உள்ளது. எனவே மாதவச்சிவஞானமுனிவர் சித்தாந்த சைவர்களால் பாடியகாரர் என மதித்துக் கொண்டாடத் தக்கவராக விளங்குகின்றார். இது பற்றியே இவருக்குத் திராவிட மாபாடிய கர்த்தராகிய மாதவச் சிவஞான முனிவர் எனப் பெயர் வழங்கி வருகின்றது. (இங்குத் திராவிடம் என்பது தமிழ் என்னும் பொருளில் கூறப்பட்டுள்ளது).