Saiva Siddhanta

Sivagnana Mapadiyam - Pulangal


Listen Later

கன்னியாகுமரிக்கு அருகில் சுசீந்திரத்திலுள்ள திருவாவடுதுறை கிளை மடமான ஈசான மடத்துக்கு முக்களாலிங்கரை அழைத்துச் சென்று அங்கே எழுந்தருளியிருந்த ஆதீனச் சின்னப் பட்டம் வேலப்ப தேசிகரிடம் தம்பிரான்கள் விஷயத்தைச் சொன்னார்கள். முக்களாலிங்கரின் ஞானத்தைக் கண்டு வியந்து அவருக்கு தீக்ஷையும், உபதேசமும் செய்து சிவஞான ஸ்வாமிகள் என்று பெயருமிட்டுத் திருவாவடுதுறை ஆதினத்தில் தம்பிரானாக நியமித்தார்.


தமிழகத்திலுள்ள பல கோயில்களுக்குப் பாத யாத்திரை மேற்கொண்டு காஞ்சிபுரம் வந்தடைந்தார். அங்குள்ள பிள்ளையார்பாளையம் திருவாவடுதுறை ஆதீனக் கிளை மடத்தில் பல காலம் தங்கியிருந்து பாடம் சொன்னதுடன் ஏராளமான நூல்கலையும் இயற்றினார். இலக்கணம் (தொல்காப்பியச் சூத்திர விருத்தி, சங்கர நமச்சிவாயப் புலவர் நன்னூல் விருத்தியுரைத் திருத்தம், இலக்கண விளக்கச் சூறாவளி); இலக்கியம் (காஞ்சிப் புராணம் முதற்காண்டம், சோமேசர் முதுமொழி வெண்பா,குளத்தூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி, கலசைப் பதிற்றுப்பத்து அந்தாதி, இளசைப் பதிற்றுப்பத்து அந்தாதி, கச்சி ஆனந்த ருத்திரேசர் பதிகம், திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு, கலைசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ், குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், திருத்தொண்டர் திருநாமக் கோவை, இராஜவல்லிபுரம் அகிலாண்டேஸ்வரி பதிகம், திருவேகம்பர் அந்தாதி, திருமுல்லைவாயில் அந்தாதி, பஞ்சாக்கர தேசிகர் மாலை, கம்ப ராமாயண முதற் செய்யுட் சங்கோத்தர விருத்தி); தருக்கம் (தருக்க சங்கிரகமும் அன்னம் பட்டீயமும்), சமயம் (சிவஞானபாடியம், சிவஞானப் போதச் சிற்றுரை, சித்தாந்தப் பிரகாசிகை, சிவஞானசித்திப் பொழிப்புரை, அரதத்தாசாரியர் சுலோக பஞ்சக மொழிபெயர்ப்பு, என்னையிப்பவத்தில் என்னும் செய்யுள் சிவசமயவாத உரை மறுப்பு, எடுத்து என்னுஞ் சொல்லுக்கிட்ட வைரக்குப்பாயம், சிவ சமயவாத உரை மறுப்பு, சிவதத்துவ விவேகம், சித்தாந்த மரபு கண்டனக் கண்டனம்) என 4 தலைப்புகளில் 29 நூல்கள் எழுதியுள்ளார்.

...more
View all episodesView all episodes
Download on the App Store

Saiva SiddhantaBy suresh babu