
Sign up to save your podcasts
Or


திருவாவடுதுறை ஆதீனக்குலதீபம்
திருநந்தி மரபு – மெய்கண்டசந்தானத்தின் வழியில் வந்த நமச்சிவாய தேசிகரால் நிறுவப்பெற்ற திருவாவடுதுறை ஆதீனத்தின் புகழ் இம்முனிவர் பெருமானால் பெரிதும் விளக்கமுற்றுத் திகழ்ந்ததனால் இவர் திருவாவடுதுறை ஆதினக் குல தீபம் எனப் போற்றப்படுகின்றார். இன்னும் இம்முனிவர் பெருமான் பாடிய வாழ்த்துப் பாடலே இவ்வாதீனத்துக் குருமரபு வாழ்த்தாக இவ்வாதினத்தால் பாடப்பட்டு வருகிறது. சீர்வளர்சீர் குருமகா சந்நிதானங்கள் நமச்சிவாய தேசிகரை வழிபடும் பொழுது ஓதுவா மூர்த்திகளால் இம்முனிவர் பெருமான் பாடிய பஞ்சாக்கரதேசிகர் மாலையில் உள்ள பாடல்களை ஓதுவதே வழக்கமாக உள்ளது.
திருவடிப்பேறு
இங்ஙனம் பலவகையாலும் புகழ்பெற்று விளங்கிய மாதவச் சிவஞான முனிவர் திருவாவடுதுறையில் ஒரு விசுவாவசு ஆண்டு – சித்திரை திங்கள் – ஆயிலிய நாளில் திருவடிப்பேறு எய்தினார். அது கி.பி. 1785 என்று கணக்கிடப்படுகின்றது. இன்று 225 ஆண்டுகள் ஆகின்றன.
By suresh babuதிருவாவடுதுறை ஆதீனக்குலதீபம்
திருநந்தி மரபு – மெய்கண்டசந்தானத்தின் வழியில் வந்த நமச்சிவாய தேசிகரால் நிறுவப்பெற்ற திருவாவடுதுறை ஆதீனத்தின் புகழ் இம்முனிவர் பெருமானால் பெரிதும் விளக்கமுற்றுத் திகழ்ந்ததனால் இவர் திருவாவடுதுறை ஆதினக் குல தீபம் எனப் போற்றப்படுகின்றார். இன்னும் இம்முனிவர் பெருமான் பாடிய வாழ்த்துப் பாடலே இவ்வாதீனத்துக் குருமரபு வாழ்த்தாக இவ்வாதினத்தால் பாடப்பட்டு வருகிறது. சீர்வளர்சீர் குருமகா சந்நிதானங்கள் நமச்சிவாய தேசிகரை வழிபடும் பொழுது ஓதுவா மூர்த்திகளால் இம்முனிவர் பெருமான் பாடிய பஞ்சாக்கரதேசிகர் மாலையில் உள்ள பாடல்களை ஓதுவதே வழக்கமாக உள்ளது.
திருவடிப்பேறு
இங்ஙனம் பலவகையாலும் புகழ்பெற்று விளங்கிய மாதவச் சிவஞான முனிவர் திருவாவடுதுறையில் ஒரு விசுவாவசு ஆண்டு – சித்திரை திங்கள் – ஆயிலிய நாளில் திருவடிப்பேறு எய்தினார். அது கி.பி. 1785 என்று கணக்கிடப்படுகின்றது. இன்று 225 ஆண்டுகள் ஆகின்றன.