
Sign up to save your podcasts
Or


மாணாக்கர்கள்
மாதவச் சிவஞானமுனிவருக்கு அமைந்த மாணாக்கர்களுள் பன்னிருவர் மிகச் சிறந்த மாணாக்கர்களாகக் கருதப்படுகின்றனர். அவர்களுள்ளும் கவிராட்சச கச்சியப்ப முனிவர் முதன்மை மாணாக்கராக மதிக்கப்படுகின்றார். மற்றும் தொட்டிக்கலை மதுரகவி சுப்பிரமணிய முனிவர், காஞ்சிபுரம் இலக்கணம் சிதம்பரநாத முனிவர் மிகச் சிறந்த மாணாக்கர்களாகக் கருதப்படுகின்றனர்.
புகழ்நூல்கள்
மாதவச் சிவஞான முனிவர் பெருமானின் புகழினை விரிவாகக் கூறும் தனிப்பாடல்களும், பதிகங்களும், சிற்றிலக்கியங்களும் மிகப்பல உள்ளன. அவற்றுள் தொட்டிக்கலை – மதுரகவி சுப்பிரமணிய முனிவர் பாடிய தனிப்பாடல்கள் மிகச் சிறப்புடையன. இப்பாடலகளில் ஞானமே வடிவானவர் என்றும் சிவாகமங்களுக்கெல்லாம் ஆகாரமாய் (இருப்பிடமாய்) விளங்குபவர் என்னும் நூலும் குறிப்பிடத்தக்க சிறப்புடையது.
By suresh babuமாணாக்கர்கள்
மாதவச் சிவஞானமுனிவருக்கு அமைந்த மாணாக்கர்களுள் பன்னிருவர் மிகச் சிறந்த மாணாக்கர்களாகக் கருதப்படுகின்றனர். அவர்களுள்ளும் கவிராட்சச கச்சியப்ப முனிவர் முதன்மை மாணாக்கராக மதிக்கப்படுகின்றார். மற்றும் தொட்டிக்கலை மதுரகவி சுப்பிரமணிய முனிவர், காஞ்சிபுரம் இலக்கணம் சிதம்பரநாத முனிவர் மிகச் சிறந்த மாணாக்கர்களாகக் கருதப்படுகின்றனர்.
புகழ்நூல்கள்
மாதவச் சிவஞான முனிவர் பெருமானின் புகழினை விரிவாகக் கூறும் தனிப்பாடல்களும், பதிகங்களும், சிற்றிலக்கியங்களும் மிகப்பல உள்ளன. அவற்றுள் தொட்டிக்கலை – மதுரகவி சுப்பிரமணிய முனிவர் பாடிய தனிப்பாடல்கள் மிகச் சிறப்புடையன. இப்பாடலகளில் ஞானமே வடிவானவர் என்றும் சிவாகமங்களுக்கெல்லாம் ஆகாரமாய் (இருப்பிடமாய்) விளங்குபவர் என்னும் நூலும் குறிப்பிடத்தக்க சிறப்புடையது.