
Sign up to save your podcasts
Or


ஒருநாள் சிவஞான முனிவர் கல்வி பயிலும் பள்ளியிலிருந்து நண்பகல் உணவுக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தவர் வழியில் திருவாவடுதுறை ஆதினத்துத் தம்பிரான்மார்கள் சிலரைக் கண்டார். அவர்களை வணங்கி நின்று தம் இல்லத்தில் நண்பகல் திருவமுது கொள்வதற்கு எழுந்தருள வேண்டுமென்று பணிவுடன் விண்ணப்பம் செய்தார். தம்பிரான்மார்களும் அச்சிவநெறிச் செல்வராகிய சிறிய பெருந்தகையாரின் விண்ணப்பத்தினை ஏற்று அவருடன் சென்றனர். வீட்டில் அன்னையார் மட்டும் இருந்தார். தந்தையார் வெளியில் சென்றிருந்தார். இச்சிறுவர் அன்னையாரிடம் விவரம் சொல்லித் தம்பிரான்மார்களுக்கு நண்பகல் திருவமுது படைத்து மகிழ்ந்தார். தம்பிரான்மார்களும் திருவமுது உண்டு சென்ற பின்னரே தந்தையார் வந்தார். நடந்தவை அறிந்து மகிழ்ந்தார். தந்தையார் தம்மகனையும் உடனழைத்துக் கொண்டு தம்பிரான்மார்களைத் தேடிச் சென்று தரிசித்து மகிழ்ந்தார். அப்பொழுது இச்சிறுவர் தாமும் தம்பிரான்மார்களுடன் செல்லவிரும்புவதாகத் தெரிவித்தார். பெற்றோர் மகனைப் பிரிவதற்கு வருத்தமுற்றாலும் இச்சிறுவருக்கு இது நன்மை தரும் என்று கருதி உடன்பட்டனர். தம்பிரான்மார்கள் இச்சிறுவரை உடனழைத்துச் சென்று அப்பொழுது சுசீந்திரம் என்றும் தலத்தில் தங்கியிருந்த திருவாவடுதுறை ஆதுனத்து இளையப்பட்டத்துத் தேசிகராகிய சீர்வளர்சீர் வேலப்ப தேசிக மூர்த்திகளைத் தரிசிக்கச் செய்தனர்.
By suresh babuஒருநாள் சிவஞான முனிவர் கல்வி பயிலும் பள்ளியிலிருந்து நண்பகல் உணவுக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தவர் வழியில் திருவாவடுதுறை ஆதினத்துத் தம்பிரான்மார்கள் சிலரைக் கண்டார். அவர்களை வணங்கி நின்று தம் இல்லத்தில் நண்பகல் திருவமுது கொள்வதற்கு எழுந்தருள வேண்டுமென்று பணிவுடன் விண்ணப்பம் செய்தார். தம்பிரான்மார்களும் அச்சிவநெறிச் செல்வராகிய சிறிய பெருந்தகையாரின் விண்ணப்பத்தினை ஏற்று அவருடன் சென்றனர். வீட்டில் அன்னையார் மட்டும் இருந்தார். தந்தையார் வெளியில் சென்றிருந்தார். இச்சிறுவர் அன்னையாரிடம் விவரம் சொல்லித் தம்பிரான்மார்களுக்கு நண்பகல் திருவமுது படைத்து மகிழ்ந்தார். தம்பிரான்மார்களும் திருவமுது உண்டு சென்ற பின்னரே தந்தையார் வந்தார். நடந்தவை அறிந்து மகிழ்ந்தார். தந்தையார் தம்மகனையும் உடனழைத்துக் கொண்டு தம்பிரான்மார்களைத் தேடிச் சென்று தரிசித்து மகிழ்ந்தார். அப்பொழுது இச்சிறுவர் தாமும் தம்பிரான்மார்களுடன் செல்லவிரும்புவதாகத் தெரிவித்தார். பெற்றோர் மகனைப் பிரிவதற்கு வருத்தமுற்றாலும் இச்சிறுவருக்கு இது நன்மை தரும் என்று கருதி உடன்பட்டனர். தம்பிரான்மார்கள் இச்சிறுவரை உடனழைத்துச் சென்று அப்பொழுது சுசீந்திரம் என்றும் தலத்தில் தங்கியிருந்த திருவாவடுதுறை ஆதுனத்து இளையப்பட்டத்துத் தேசிகராகிய சீர்வளர்சீர் வேலப்ப தேசிக மூர்த்திகளைத் தரிசிக்கச் செய்தனர்.