*நடராஜ பத்து*
*D.V.ரமணி*
👇👇👇
🎶 🕉 *நடராஜர் பத்து* 🕉 🎶
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*திருவாசகத்திற்கு* இணையாக *தில்லை நடராஜரின்* மீது பாடப்பட்டது 🎶 *நடராஜ பத்து ஆகும்..!*
சுமார் முந்நூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ✒️ *சிறுமணவூர் முனுசாமி* என்பவர் எழுதிய நடராஜ பத்து சைவ அன்பர்களிடம் மிக பிரபலமாகத் திகழ்கின்றது.
*மிக எளிதாக விளங்கக் கூடிய வார்த்தைகள், செறிவு நிறைந்த கருத்துக்கள், அழகிய சந்தங்கள் என்பதாக அமைந்த விருத்தங்கள் வகையைச் சேர்ந்தது நடராஜ பத்து பாடல்கள் ஆகும்.!*
ஒவ்வொரு பாடலின் முடிவிலும் *"ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே"* என்று முடியும் வரிகள் நெஞ்சத்தைக் கொள்ளை கொள்வதாக அமையக்கூடியது.!
*🌺பாடல் 1'ன் வரிகள்:*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ மறை நான்கின் அடிமுடியும் நீ மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ மண்டல மிரண்டேழும் நீ.*
*பெண்ணம் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும் நீ பிறவும் நீ ஒருவன் நீயே பேதாதி பேதம் நீ பாதாதி கேசம் நீ பெற்ற தாய் தந்தை நீயே.*
*பொன்னும் நீ பொருளும் நீ இருளும் நீ ஒளியும் நீ போதிக்க வந்த குரு நீ புகழொணாக் கிரகங்க ளொன்பதும் நீ யிந்தப் புவனங்கள் பெற்றவனும் நீ*
*எண்ணரிய ஜீவகோ டிகளீன்ற அப்பனே என் குறைக ளார்க் குரைப்பேன். ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லை வாழ் நடராஜனே*
*ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
(அனைத்துமாகி நின்ற நடராஜரைப் போற்றுவதாக அமைந்தது.)*
*🌺பாடல் 2'ன் வரிகள்:*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*மானாட மழுவாட மதியாட
புனலாட மங்கை சிவகாமியாட
மாலாட நூலாட மறையாட திறையாட
மறை தந்த பிரம்மனாட*
*கோனாட வானுலகக்
கூட்டமெல்லாமாட குஞ்சர
முகத்தனாட குண்டலம் இரண்டாட
தண்டைபுலி உடையாட
குழந்தை முருகேசனாட*
*ஞான சம்பந்தரோடு இந்திரர்
பதினெட்டு முனி அட்ட பாலகருமாட நரைதும்பை அறுகாட நந்தி வாகனமாட நாட்டியப் பெண்களாட*
*வினையோட உனை பாட, எனை நாடி இதுவேளை விருதோடு ஆடி வருவாய்*
🌺*பாடல் 3'ன் வரிகள்:*
*கடலென்ற புவிமீதில் அலையென்ற உருக்கொண்டு கனவென்ற வாழ்வை
நம்பி காற்றென்ற மூவாசை மாருதச்
சூழலிலே கட்டுண்டு நித்தம் நித்தம்*
*உடலென்ற கும்பிக்கு உணவென்ற
இரைதேடி ஓயாமல் இரவு பகலும்
உண்டுண்டு உறங்குவதைக் கண்டதே
யல்லாது ஒரு பயனடைந்திலனே!*
*தடமென்ற இடி கரையில்
பந்தபாசங்களெனும் தாபமாம்
பின்னலிட்டு தாயென்று சேயென்று
நீயென்று நானென்று தமியேனை
இது வண்ணமாய்*
*இடையென்று கடைநின்று ஏனென்று
கேளாது இருப்பதுன் அழகாகுமோ
(மனித வாழ்வின் சிக்கல்களை நீக்க
வேண்டி பாடுவதாக அமைந்தது)*
🌺பாடல் 4'ன் வரிகள்:*
*வம்பு சூனியமல்ல வைப்பல்ல மாரணம் தம்பனம் வசியமல்ல பாதாள அஞ்சனம்
பரகாய பிரவேசம் அதுவல்ல ஜாலமல்ல*
*அம்பு குண்டுகள் விலக மொழியு
மந்திரமல்ல ஆகாய குளிகையல்ல
அன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல
அரிய மோகனமுமல்ல*
*கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரமரிஷி கொங்கணர் புலிப்பாணியும்கோரக்கர் வள்ளுவர் போகமுனி இவரெலாம்
கூறிடும் வைத்தியமல்ல*
*என்மனது உன்னடி விட்டு விலகாது நிலைநிற்கவே உளது கூறவருவாய்*
(மாந்த்ரீகம், சித்தர்கள் பற்றி
கூறியுள்ள பாடல்)
🌺 பாடல் 5'ன் வரிகள்:*
*நொந்து வந்தேனென்று ஆயிரம்
சொல்லியும் செவியென்ன மந்தமுண்டோ நுட்பநெறி அறியாத பிள்ளையைப்
பெற்றபின் நோக்காத தந்தையுண்டோ*
*சந்ததமுன் தஞ்சம் என்றடியைப்
பிடித்தபின் தளராதநெஞ்சமுண்டோ
தந்திமுகன் அறு முகன் இருபிள்ளை இல்லையோ தந்தை நீ மலடுதானோ*
*விந்தையும் ஜாலமும் உன்னிடமிருக்குதே வினையொன்றும் அறிகிலேனே,
வேதமும் சாஸ்திரமும் உன்னையே
புகழுதே வேடிக்கை இதுவல்லவோ*
*இந்த உலகீரேழும் ஏனளித்தாய்
சொல்லு இனி உன்னை விடுவதில்லை*
(நிந்தா ஸ்துதியில் அமைந்த பாடல்)*
🌺*பாடல் 6'ன் வரிகள்:*
*வழிகண்டு உன்னடியை துதியாத
போதிலும் வாஞ்சையில்லாத போதிலும் வாலாயமாய் கோயில் சுற்றாத போதிலும் வஞ்சமே செய்த பொதிலும்மொழி எதுகை
மோனையும் இல்லாமல் பாடினும்*
*மூர்க்கனேன் முகடாகினும் மோசமே செய்யினும்தேசமே கவரினும் முழுகாமியே ஆகினும் பழியெனக் கல்லவே தாய்தந்தைக்
கல்லவோ*
*பார்த்தவர்கள் சொல்லார்களோ பாரறிய மனைவிக்கு பாதியுடல் ஈந்த நீ பாலகனை காக்கொணாதோ எழில்பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ என் குறைகள் தீர்த்தல் பெரிதோ*
(குறைகளற்ற வாழ்வை பெற
வேண்டுவதாக அமைந்த பாடல்)
🌺*பாடல் 7'ன் வரிகள்:*
*அன்னை தந்தைகள் எனை ஈன்றதர்க்கு அழுவனோ அறிவிலாததற்கு அழுவனோ
அல்லாமல் நான்முகன் தன்னையே
நோவனோ ஆசை மூன்றுக் கழுவனோ*
*முன்பிறப்பென்ன வினை செய்தேன் என்றழுவனோ என் மூட அறிவுக்கு
அழுவனோ முன்னில் என் வினை வந்து
மூளும் என்றழுவனோ முத்தி வருமென்று உணர்வனோ*
*தன்னை நொந்தழுவனோஉன்னை நொந்தழுவனோ தவமென்னஎன்றழு
வனோ தையலர்க்கு அழுவனோ
மெய்வளர்