Praveen Isaac Asir

Tamil Worship # தமிழ் ஆராதனை


Listen Later

Tamil Worship.

  1. தம் கிருபை பெரிதல்லோ (Tham Kirubai Perithallo)
  2. ஆயிரம் நாவுகள் போதா ( Aayiram naavugal potha)
  3. உம் நாமம் சொல்ல சொல்ல (Um Naamam Solla Solla )
  4. சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே (Sarva Srishtikkum Yejamaan)

  5. தம் கிருபை பெரிதல்லோ (Tham Kirubai Perithallo)

    தம் கிருபை பெரிதல்லோ

    எம் ஜீவனிலும் அதே
    இம்மட்டும் காத்ததுவே
    இன்னும் தேவை, கிருபை தாருமே

    1. தாழ்மை உள்ளவரிடம் தங்கிடுதே கிருபை

    வாழ்நாள் எல்லாம் அது போதுமே
    சுகமுடன் தம் பெலமுடன்
    சேவை செய்யக் கிருபை தாருமே – தம் கிருபை

    2. நிர்மூலமாகாததும் நிற்பதுமோ கிருபை

    நீசன் என் பாவம் நீங்கினதே
    நித்திய ஜீவன் பெற்று கொண்டேன்
    காத்துக் கொள்ள கிருபை தாருமே – தம் கிருபை

    3. தினம் அதிகாலையில் தேடும் புதுக்கிருபை

    மனம் தளர்ந்த நேரத்திலும்
    பெலவீன சரீரத்திலும்
    போதுமே உம் கிருபை தாருமே – தம் கிருபை

    4. மா பரிசுத்த ஸ்தலம் கண்டடைவேன் கிருபை

    மூடும் திரை கிழிந்திடவே
    தைரியமாய்ச் சகாயம் பெற
    தேடி வந்தேன் கிருபை தாருமே – தம் கிருபை

    5. ஒன்றை ஒன்று சந்திக்கும் சத்தியம் உம் கிருபை

    என்றும் மறவேன் வாக்குத்தத்தம்
    நீதியுமே சமாதானமுமே
    நிலை நிற்கும் கிருபை தாருமே – தம் கிருபை

    6. ஸ்தோத்திர ஜெபத்தினால் பெருகுதே கிருபை

    ஆத்தும பாரம் கண்ணீரோடே
    சோர்வின்றி நானும் வேண்டிடவே
    ஜெப வரம் கிருபை தாருமே – தம் கிருபை

    7. கர்த்தர் வெளிப்படும் நாள் அளித்திடும் கிருபை

    காத்திருந்தே அடைந்திடவே
    இயேசுவே உம்மைச் சந்திக்கவே
    இரக்கமாய்க் கிருபை தாருமே – தம் கிருபை


    ஆயிரம் நாவுகள் போதா ( Aayiram naavugal potha)

    ஆயிரம் நாவுகள் போதா

    ஆண்டவர் உந்தனை பாட
    கணக்கில்லா நன்மைகள் செய்தீர்
    கர்த்தர் உம்மை போற்றிப் பாட

    1.அலை மோதியோடும் படகாய்
    அலைந்த என்னை அன்பால் மீட்டிர்
    ஆணிகள் பாய்ந்த உம் கைகள்
    ஆண்டு நடத்தும் உம் அன்பால்

    2.காலமெல்லாம் உந்தன் அன்பால்

    கரம் பிடித்தென்னை நடத்தி
    காத்த உம் கிருபையை நினைத்தே
    கர்த்தா உம்மைப் போற்றிப் பாட

    3.அன்பாக என்னை அழைத்தீர்
    கனமான சேவையை தந்தீர்
    ஆயுள் முழுவதும் துதிகள்
    ஆயிரமாய் சொல்லி வாழ்வேன்


    உம் நாமம் சொல்ல சொல்ல (Um Naamam Solla Solla )

    உம் நாமம் சொல்ல சொல்ல

    என் உள்ளம் மகிழுதையா
    என் வாழ்வில் மெல்ல மெல்ல
    உம் இன்பம் பெருகுதையா

    1. பாலென்பேன் தேனென்பேன், தெவிட்டாத அமுதென்பேன்

    உம் நாமம் என்னவென்பேன்
    மறையென்பேன் நிறையென்பேன், நீங்காத நினைவென்பேன்
    உம் நாமம் என்னவென்பேன் — உம் நாமம்

    2. மாணிக்க தேரோடு, காணிக்கை தந்தாலும்

    உமக்கது இணையாகுமா
    உலகமே வந்தாலும், உறவுகள் நின்றாலும்
    உமக்கு அது ஈடாகுமா — உம் நாமம்

    சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே (Sarva Srishtikkum Yejamaan)

    சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே

    சர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரே
    எங்கள் இதயத்தில் உம்மை போற்றிடுவோம்
    என்றென்றும் பணிந்து தொழுவோம்

    ஆ ஆ ஆ.. அல்லேலூயா ஆமென்

    1. வானம் பூமி ஒழிந்து போனாலும்

    உம் வார்த்தை என்றும் மாறாதே
    இவ்வாழ்க்கை அழிந்து மறைந்து போம்
    விசுவாசி என்றென்றும் நிலைப்பான்

    2. கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள்

    கிருபை எங்கள் மேல் ஊற்றுவீரே
    ஆவி ஆத்துமா சரீரம் உம் சொந்தமே
    அதை சாத்தான் தொடாமல் காப்பீரே

    3. எல்லா மனிதர்க்கும் ஆண்டவர் நீரே

    எல்லா ஆசீர்வாதத்திற்கும் ஊற்றே
    எங்கள் இதயத்தை உம்மிடம்
    படைக்கின்றோமே – ஏங்குகின்றோம்
    உம் ஆசீர் பெறவே

    4. சபையின் அஸ்திபாரமும் நீரே

    சபையின் தலையானவர் நீரே
    சபையை போஷித்து பாதுகாத்தென்றும்
    பார்த்துக் கொள்ள வருபவர் நீரே


    ---
    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/praveenisaac/message
    Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/praveenisaac/support
    ...more
    View all episodesView all episodes
    Download on the App Store

    Praveen Isaac AsirBy Praveen Isaac Asir