சத்தியத்தை தெரிந்து கொள்ளுங்கள் அந்த சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும்... தேசத்தை சுமந்துரிப்போம் என்ற இந்த தேவ செய்தி மூலமாக நமது இந்திய தேசத்தை சுந்தரிக்க நாம் பாடுபட வேண்டும் என்று குறிப்பிடாமல் அழியாத நம் பரமதேசமாகிய பரலோகத்தை நாம் எப்படி சுதந்தரித்துக் கொள்வது என்பதை குறித்து அன்பு சகோதரர் எம்டி ஜெகன் அவர்கள் நம்முடன் தேவச் செய்தியை வசனத்தின் வாயிலாக பகிர்ந்து அளித்துள்ளார் ...... எனவே அழிந்து போகக் கூடிய இந்த உலகத்தின் மேல் ஆசை வைக்காமல் அழியாத நித்திய உலகம் ஆகிய பரலோகத்தின் மேல் நமது வாஞ்சியையும் ஆசையையும் வைப்போம் ....... அழியும் பூமியே இவ்வளவு அழகாக இருக்குமா என் அழியாத பரலோகத்தில் எவ்வளவு மேன்மை காணப்படும் என்பதை சிந்தித்துப் பாருங்கள் ......... பரலோகத்தில் ஆயிரம் மேன்மைகள் இருப்பினும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே மேன்மையிலும் மேன்மையானவர் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் ...... இனி படைப்புகளை நாம் பார்க்காமல் படைப்பாளியாகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நாம் பார்த்து அவருக்கு பின் நடப்போம்...!