மனோ பாடிய முதல் பாடல். இசைஞானி யின் இசை யில் முதல் தரமான பாடல். ஆனால் எல்லா ரசிகர்களையும் சென்றடைந்ததா என்று தெரியவில்லை. பாகேஸ்ரி ராகம். காட்சிகளை விட்டு விட்டு இசையை மட்டும் கவனியுங்கள். சேர்ந்திசை, வயலின்களின் இசை யுடன் முன்னிசை துவங்கி மனோ பாடும் தேனான பல்லவி. இதன் பின்னணியில் மெல்லிய bass guitar & hi hats இசை மட்டும். முதல் இடையிசை.....Solo violin & cello.... Trumpet & bass guitar. ... Grandeur. 👏 அழகான சரணம் முடிந்து இப்போது வரும் பல்லவியை உற்று கேளுங்கள். பின்னணியில் layer களில் humming, violins, bass guitar, hi hats எல்லாம் இணைந்து வரும் போது இனிமையாக இருக்கும். அடுத்த முறை வரும் பல்லவி யும் இதேபோல் தான். இரண்டாம் இடையிசை... Trumpet & violins இடையே சிறிய உரையாடல்... பின் solo violin & cello இசை..... நம்மை வேறு ஒரு உலகத்தில் உலவ வைக்கும். 😇மாறுதலான இரண்டாம் சரணம். பொதுவாக டும் டும் என்ற இசை தாள வைத்தியத்தில் தான் கொடுக்கப்படும். இதில் மனோ பாடும் டும் டும்.... வீணையில் எதிரொலிக்கிறது.... என்னவொரு கற்பனை. மிகவும் அழகாக முடியும் பாடல்.
" தேன்மொழி யில், தேன் இசையில் , தேன் குரலில், இந்தப் பாடலை ரசித்து கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். "