நான் தனிமையில் செல்லும் நேரத்தில் என் முதல் நண்பன் நீ எனக்கு தென்றல் இயற்கையாய் தீண்டினாலும் நீ என்னை தாலாட்டும் அழகே தனி தான் சந்தோஷத்தில் உன்னை தேடிய நாட்களை விட துக்கத்தில் உனை தேடிய நாட்கள் அதிகம் சில இன்னிசையில் என்னையே மறக்க வைப்பாய் சில இன்னிசையில் அவளின் முகமாயும் நீ இருப்பாய் அவளும் நானும் சேர்ந்து ரசித்த அழகிய நிமிடம் இன்று உன்னோடு தனிமையில் கிடைத்தாலும் ஆனந்தம் பொங்கி வழிந்தாலும் சிறு கண்ணீரும் கலந்தே தான் கரைகிறது உன்னை என்ன குற்றம் சொல்ல ? பாத்தியப்பட்டவன் நானிருக்க நினைவெல்லாம் வருடும் அவள் கூந்தல் வாசம் உன்னாலே மீண்டும் அடைந்தேன் நிஜ கண்கள் தான் இந்த தனிமையில் இருளினை காண்கிறது மனக்கண்களோ உன்னோடு இணைந்து அவள் முகம் பார்க்கிறது தேடியும் கிடைக்காத பொக்கிஷம் அழகிய நினைவுகள் அப்பரிசின் அற்புத திறவுகோல் நீயே தான் நண்பனும் நீயே நம்பிக்கையும் நீயே கோபமும் நீயே குணமும் நீயே தனிமையில் என்னருகினில் நீ வரமே என்னோடு தனிமையை அனுபவித்திடு பகலினில் சிரிக்கும் நீயும் இரவினை விரும்பிடுவாய் - என் இன்னிசையே... என் இனிய இசையே...