வாயாடி பெத்த புள்ள
படம் : கனா (2018)
இசை : திபு நின்னன் தாமஸ்
பாடியவர்கள் : ஆராதனா சிவகார்த்திகேயன், சிவகார்த்திகேயன், வைக்கம் விஜயலெட்சுமி
பாடல் வரிகள் : GKBஒரு கையெழுத்தில், ஒரு வாக்குறுதியில் தன்னிடம் இருந்த அத்தனையையும் இழந்தவர்களை அறிந்ததுண்டா? அப்படியெல்லாம் நிகழுமா என எத்தனை ஆச்சரியப்பட்டாலும், அசாத்தியமான அந்த ஒன்று மிக எளிதாக நிகழ்ந்தேறியிருக்கும்.
தொழில் - வியாபார வாய்ப்பில் மிகப் பெரிய ஏமாற்றங்களைச் சந்தித்த தருணங்களை நினைவில் மீட்டிப் பாருங்கள். அது நமக்குத் தெரியாத துறையாக இருந்திருக்கும்.
நம்முடனே துள்ளலும் சிரித்த முகமுமாய் அதேசமயம் எப்போதும் தான் எதையோ பரபரப்பாகச் செய்யும் பாவனையில் இருக்கும் ஒருவர் இருப்பார். எது நடந்தாலும் அசராமல் அனைத்துm தெரியும் என்பதாகப் பேசுபவராகவும் இருப்பார். எல்லாம் நான் பார்த்துக்கிறேன் என்பார். நாம் யோசிப்பதற்கே அவகாசம் கொடுக்காமல் நம்மால் முடியும், நமக்காகச் செய்வோம், நாம்தான் செய்ய வேண்டும் என்பதாக ஊக்கம் தந்து கொண்டேயிருப்பார். அவ்வப்போது உனக்காகத்தான் செய்றேன் என்பதையும் சொல்வார். தனக்குப் பெரிய விசயமே இல்லை, தனக்கில்லாத அனுபவமா என்பதை உணர்த்திக் கொண்டேயிருப்பார்.
மிக எளிதாக, தான் விரித்த அல்லது யாரோ விரித்து வைத்திருந்த வலையில் தன்னை நம்பியவர்களை சிக்க வைத்துவிட்டு அவர் அடுத்த அத்தியாயத்தைத் துவங்கியிருப்பார். உண்மையில் அப்படி சிக்க வைப்பது அவரின் நோக்கமாக இல்லாமலும்கூட இருக்கலாம். ஆனால் வலை விரிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கும். உலக இயக்கத்தில் இதுவும் ஓர் அங்கம்தான்.
*
**மேப்படியான் - Meppadiyan
Malayalam Movie - Amazon prime**
ஒட்டுமொத்தப் படத்தில் என்னைக் கவர்ந்தது Saiju Kurup நடித்த ப்லிப் வர்கி பாத்திரம்தான்.
விடிந்து வெகுநேரமாகி ஒரு வழியாக எழுந்ததும் காலி சிகரெட் பாக்கெட்டைப் பார்த்தும் ஏமாறாமல் இரவு வீசிய துண்டுச் சிகரெட்டில் ஓரளவு பெரிதாக இருக்கும் ஒன்றில் நெருப்பு பொருத்தி கழிவறையில் அமர்ந்தவாறு கேரளா முழுமைக்குமான முட்டைச் சந்தையைக் கையப்படுத்தும் திட்டத்தை கெத்தாக விவரிக்கும் அந்தக் காட்சியிலேயே அந்தப் பாத்திரத்தின் முப்பரிமாணமும் விளங்கிவிடுகின்றது.
தன்னுடைய கடையில் தாமதமாக விளக்கேற்றுவதற்கொரு வியாக்யானம், ஆசானுக்கு ஓர் ஆப்பு, சந்திரனுக்கு ஒரு சமாதானம், பாட்டிக்கு ஒரு வெடி என்று எல்லா பந்துகளையும் அடிக்கும் அந்த பேட்டிங் திறன் ஆச்சரியம்தான், ஆனால் அதுதான் தொடர்ந்து யார்யாரையோ காவு வாங்கிக் கொண்டிருக்கும்.
அப்படியான ப்லிப் வர்க்கி வாயிலாக ஓர் எளிய மனிதன் சந்திக்கும் கடுமையான சவால்கள்தான் மேப்படியான்.
*
”அவர்களால் மட்டுமே இதையெல்லாம்கூட ஒரு சினிமாவாக எடுக்க முடியும்” எனும் ஆச்சரியத்தை மலையாள திரையுலகம் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டேயிருக்கின்றது. அந்தத் தொப்பியில் மேப்படியானும் ஓர் இறகு.
வழக்கமாக பாத்திரக் கட்டமைப்புகளுக்காக முதல் நாற்பந்தைந்து நிமிடங்களை விழுங்குவார்கள். ஆனால் இந்தப் படத்தில் 25வது நிமிடத்திலேயே களம் இறங்கிவிடுகின்றனர். அங்கிருந்து விறுவிறுப்புதான்.
எளிய மனிதர்களின் வாழ்வை வாசிக்க விரும்புகிறவர்களுக்கும், ஏமாந்த அனுபவம் உள்ளவர்களுக்கும் 'மேப்படியான்’ மிகவும் பிடிக்கும்.
.