திரைப்படம்- அந்த ஒரு நிமிடம்
இசை- இளையராஜா
பாடியவர்கள்- எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
சிறிய பறவை
சிறகை விரிக்க துடிக்கிறதே
சிறகை விரித்து
நிலவை உரச நினைக்கிறதே
உதடு உருக அமுதம் பருக
வருகவே வருகவே
சிறிய பறவை
சிறகை விரிக்க துடிக்கிறதே
சிறகை விரித்து
நிலவை உரச நினைக்கிறதே
அன்பு லைலா
ஹும்
நீயே எந்தன் ஜீவ சொந்தம்
ஹஹ்ஹ
நீ சிரித்தால் பாலை எங்கும்
பூ வசந்தம்
சம்மதம் என்ன சொல்லவா
மௌனமே சொல்லும் அல்லவா
கிண்ணமாய் என்னை மாற்றவா
உன்னையே வந்து ஊற்றவா
மது போதை வேண்டுமா
இதழ் போதை நல்லது
உன் பேரைச்சொல்கிறேன்
அதில் போதை உள்ளது
வருகவே வருகவே
ஆஆஆஆ
சிறிய பறவை
சிறகை விரிக்க துடிக்கிறதே
சிறகை விரித்து
நிலவை உரச நினைக்கிறதே
உதடு உருக அமுதம் பருக
வருகவே வருகவே
சிறிய பறவை
சிறகை விரிக்க துடிக்கிறதே
ஆஆஆ
த நி சா நி ச நி
த ப த ம ப க ம பா த நி த பா ம க பா ம நி த நி
தா
க ம த மா க ம பா த
மஞ்சமே தமிழின் மன்றமே
புதிய சந்தமே சிந்தினேன்
அன்பனே
இளைய கம்பனே
கவிதை நண்பனே நம்பினேன்
சொர்ணமே அரச அன்னமே
இதழின் யுத்தமே முத்தமே
நெற்றியில் வியர்வை சொட்டுமே
கைகள் பற்றுமே ஒற்றுமே
சோழன் குயில் பாடுகையில்
சோலைக்குயில் ஓய்வெடுக்கும்
மெல்லினங்கள் பாடு கண்ணே
வல்லினங்கள் வாய் வலிக்கும்
சந்தமே இன்பம் தந்தது
கங்கையே இங்கு வந்ததே
தென்றலே இன்று நின்றது
நன்றுதான் சந்தம் என்றது
கன்றுகள் ரெண்டு இன்றுபோல்
என்றும் வென்று
வாழ்கின்றது
வாழ்கவே வாழ்கவே
ஆஆஆஆஆஆ
சிறிய பறவை
சிறகை விரிக்க துடிக்கிறதே
சிறகை விரித்து
நிலவை உரச நினைக்கிறதே
உதடு உருக அமுதம் பருக
வருகவே வருகவே
ஆஆஆஆஆ
பறவை சிறிய
சிறகை விரிக்க துடிக்கிறதே
அன்பு ரோமியோ
இங்கே ஒரு காவல் இல்லை
தேன் குடித்தால்
இங்கே ஒரு கேள்வி இல்லை
காதலின் கல்விச் சாலையில்
கண்களே நல்ல தத்துவம்
பூவையின் மேனி அற்புதம்
பூக்களால் செய்த புத்தகம்
நம் காதல் பாடவே
சுரம் ஏழு போதுமா
நம் நேசம் பேசவே
ஒரு பாஷை
போதுமா
கவிமழை பொழியுமா
ஆஆஆஆஆஆ
ஹாஹாஹ
பழைய கனவு
உனக்கு எதற்கு கலையட்டுமே
நமது கதையை
உலகம் முழுதும் புகழட்டுமே
கவிதை எழுத இளையகவிகள் எழுகவே....