அக்கரங்கட்கு எல்லாம் அகர உயிர் நின்றால்போல்
மிக்க உயிர்க்கு உயிராய் மேவினோம் -- எக்கண்ணும்
நில்லா இடத்து உயிர்க்கு நில்லாது அறிவு என்று
நல் ஆகமம் ஓதும் நாடு.
நற்றவத்தோர் தாம்காண நாதாந்தத்து அஞ்சு எழுத்தால்
உற்று உருவாய் நின்று ஆடல் உள்ளபடி -- பெற்றிடநான்
விண்ணார் பொழில்வெண்ணெய் மெய்கண்ட நாதனே!
தண்ணார் அருளாலே சாற்று.
எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே
நட்டம் புதல்வா நவிலக் கேள் -- சிட்டன்
சிவாயநம எனும் திரு எழுத்து அஞ்சாலே
அவாயம் அற நின்று ஆடுவான்.
ஆடும்படி கேள் நல் அம்பலத்தான் ஐயனே
நாடும் திருவடியிலே நகரம் -- கூடும்
மகரம் உதரம் வளர்தோள் சிகரம்
பகரும்முகம் வாமுடியப் பார்.