வாக்கு ஆகாயம் இடமா வந்து வசனிக்குக்கால்
போக்கு ஆரும் காற்று இடமாப் புல்கி அனல் - ஏற்கும்
இடும்பை குதம் நீர் இடமா மலாதி
விடும்பார் இடம் உபத்தம் விந்து.
அந்தக் கரணம் அடைவே உரைக்ககேள்
அந்தமனம் புத்தியுடன் ஆங்காரம் -- சிந்தை இவை
பற்றியது நிச்சயித்துப் பல்கால் எழுந்திருந்து அங்கு
உற்றது சிந்திக்கும் உணர்.
ஓதியிடும் நால் ஆறும் உற்று ஆன்ம தத்துவம் என்று
ஆதி அருள்நூல் அறையும்காண் -- தீது அறவே
வித்தியா தத்துவங்கள் தம்மை விளம்ப்பக்கேள்
உத்தமனே! நன்றாய் உனக்கு.
காலம்நியதி கருதும் கலைவித்தை
ஏல இராகம் புருடனே மாயை -- மால் அறவே
சொன்னோம் அடைவாகச் சொன்ன இவை தம் உண்மை