Kathai Solli

ஊரெல்லாம் டாக்டர்ஸ் - 44வது கதை


Listen Later

ஒரு நாள் ராஜாவும் மந்திரியும் பேசிகிட்டு இருந்தாங்க. ராஜா மந்திரியிடம் நம்ம ராஜ்ஜியத்தில நிறைய மக்கள் பலவகையான தொழில் செய்றாங்க. எந்த தொழில் மிக பிரபலமாக இருக்கிறதுன்னு தெரிஞ்சிக்க ஆவலா இருக்கு. டாக்டரா? விவசாயியா? தொழிலாளியா? Government வேலையா? இத நீங்க கண்டுபிடிச்சி சொல்லுங்க ன்னார் . மந்திரியும் சரி ன்னார். சில நாள் கழிச்சு மந்திரி ராஜாகிட்ட வந்து நம்ம ராஜ்ஜியத்தில டாக்டர்ஸ் தான் அதிகமா இருக்காங்க என்றார். அத நான் எப்படி நம்புறதுன்னு கேட்டறாரு ராஜா. நீங்க வேணும்ன்னா மாறுவேடம் அணிஞ்சு என் கூட ஊர் சுற்றி பாருங்க உங்களுக்கே நான் சொல்றது தான் சரின்னு தெரியும் என்றார் மந்திரி. ராஜாவும் சரின்னு ஒத்துக்கிட்டார். மாறுவேடம் அணிந்து ராஜா மந்திரியுடன் மறுநாள் காலையில ஊரு சுத்தி பார்க்க கிளம்புனார். கையில் ஒரு bandage கட்டிக்க கொண்டு வந்தார் மந்திரி. என்ன ஆச்சு? என்று கேட்டார் ராஜா. மனைவி வீட்டில் இல்லை. நான் சமையல் செய்தப்போ கையை சுட்டுக் கொண்டேன். என்று சொன்னார் மந்திரி. இரண்டு பேரும் ஊருக்குள் சென்றனர். ஒரு சாதாரண நபர் போல் வேடம் அணிந்து ராஜா மந்திரியுடன் போனாங்க. நகரத்துல பலபேருக்கு மந்திரியை தெரியும். தெரிஞ்சவங்க மந்திரியை நலம் விசாரிச்சாங்க. எல்லோரும் கையில் ஏற்பட்ட காயத்திற்கு அட்வைஸ் கூறினாங்க. தேங்காய் எண்ணெய் தடவ சொன்னார் ஒருத்தர். பச்சிலை தடவ சொன்னார் இன்னொருத்தர். கத்தாழைச் சாற்றை காயம்பட்ட இடத்தில் தடவினால் சீக்கிரம் சரியாகிவிடும்ன்னு சொன்னார் மற்றொருத்தர். இப்படி எல்லோரும் மந்திரிக்கு மருந்துக்களை அட்வைஸ் பண்ணிக்கொண்டே இருப்பதை ராஜா பார்த்தார். சிரிச்சிக்கிட்டே மந்திரியின் புத்திசாலித்தனத்தை எண்ணி பாராட்டினார். ஊரெல்லாம் டாக்டர்ஸ் தான்னு ராஜா ஒத்துக்கிட்டார்.
...more
View all episodesView all episodes
Download on the App Store

Kathai SolliBy Kathai Solli

  • 5
  • 5
  • 5
  • 5
  • 5

5

1 ratings