வா வா மழையே
என்னை தொட்டு தொட்டு போ மழையே
காரிருள் மேகம் விடுத்து புவியீர்ப்பு விசை பிடித்து
என் கன்னம் வருடு மழையே
வானத்தில் சுற்றி திரிந்து என் முகம் பார்த்த மட்டும்
சட்டென்று கிழே வந்து விடு மாமழையே
என் கண்களின் கண்ணீரும்
நீ வந்து விட்டால் மறைந்து கொள்ளும்
என் அடக்கிய சத்தம் மட்டும்
உன் முன்னால் கரைந்து போகும்
வா வா மழையே
என்னை கொஞ்சி கொஞ்சி போ மழையே
கைபேசி கையில் வைத்து
நிழல் தேடி ஓட மாட்டேன்
சேறு என ஆடை ஒதுக்கி
உன்னை தள்ளி போக மாட்டேன்
தோஷம் என்று சொல்லியும்
ஓரம் போய் ஒளிந்தே கொள்ளமாட்டேன்
கரம் இரண்டும் இறக்கையாய் விரித்து
என் மார்போடு உன்னை அனைத்து கொள்கிறேன்...
வா வா மழையே
என்னை கொஞ்சமாய் கொண்டு போ மழையே
அருகாமை மேகத்தோடு சண்டையிடு
இடியென சத்தம் எனக்கு கேட்கட்டும்
வானில் குளிர்ந்த நீ
என்னையும் கொஞ்சம் குளிர்விக்க வா
வானம்பாடி போல வானம் பார்த்து
வாசலோரம் வாஞ்சையோடு நிற்கிறேன்
வஞ்சிக்கொடி போல என்னை வந்து அனைத்துக்கொள்
வா வா மழையே...