என்னை என்ன செய்தாய் வேங்குழலே
என்னை என்ன செய்தாய் வேங்குழலே
என்னை என்ன செய்தாய் வேங்குழலே
எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லையே
எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லையே…..
நாளும் சுக நாதம் தந்து அனல் மெழுகாய்
இந்த இள மனம் இளகிடவே
என்னை என்ன செய்தாய் வேங்குழலே…
என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்
என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்……
என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்
என்னுள் எனைக் கண்டு
நல் இன்பம் படைத்து நின்றேன்
என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்
என்னுள் எனைக் கண்டு
நல் இன்பம் படைத்து நின்றேன்
வேறு ஞாபகங்கள் வருடாமல் நான் இருந்தேன்
வேறு ஞாபகங்கள் வருடாமல் நான் இருந்தேன்
யாரோ… அவன் யாரோ…
யாரோ… அவன் யாரோ…
யமுனா நதி தீரத்தில் அமர்ந்தொரு இசை கலையால்
என்னை என்ன செய்தாய் வேங்குழலே…
என்னை என்ன செய்தாய் வேங்குழலே…
மூங்கில் போலே விளைந்தொரு
மங்கை இருக்க
துளைக்கும் வண்டாய் மனதை
துளைத்தாய் நீயே
தூங்கும் யாழாய்
தனிமையில் தோகை இருக்க
மீட்டும் விரலாய் நரம்பினில் நடந்தாய் நீயே
வண்ணம் மலர் உண்டு…
வண்ணம் மலர் உண்டு
வெள்ளி அலை உண்டு….
வருடிடும் காற்றென உலவ போ
வண்ணம் மலர் உண்டு
வெள்ளி அலை உண்டு
வருடிடும் காற்றென உலவ போ
பச்சைக் கொடி ஒன்று
பசும் புல் மடி உண்டு
நீர் துளியை போல தழுவ போ
இசைகள் நுழையாத செவிகள் பல உண்டு
உனது திறமை அங்கு பலிக்குமோ
நீயும் விளையாட நூறு இடம் உண்டு
அனுதினம் வருத்துதல் நியாயமோ
என்னை என்ன செய்தாய் வேங்குழலே
என்னை என்ன செய்தாய் வேங்குழலே
எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லையே
எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லையே
நாளும் சுக நாதம் தந்து
இந்த இள மனம் இளகிடவே
ஏ…….வேங்குழலே வேங்குழலே…