வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் இடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று நம்மைப் பார்த்து கூறுகின்ற நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் நேற்றும் இன்றும் என்றும் மாறாததாய் இருந்து நம் பாரங்களை சுமந்து நம் கஷ்டங்களை நம்மை விட்டு எரிந்து எப்போதும் நம்மை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது ......... மேலும் கர்த்தருக்குள் எப்பொழுதும் நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே அவருடைய சித்தமாய் இருக்கிறது ....... ஆகவே எதைக் குறித்தும் நாம் கவலைப்படாமல் கர்த்தரை நோக்கி நாம் ஓடிக் கொண்டிருக்க வேண்டும் ....... இந்த உலகம் மாயை என்பதை உணர்ந்து தொடர்ந்து சத்தியத்தின் பாதையில் நித்தமும் நம்மை நடத்த சர்வ வல்லமையுள்ள ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நாம் நித்தமும் வேண்டிக் கொள்ள வேண்டும் ஏனெனில் கர்த்தர் நம்மை பரிசுத்தப்படுத்தாவிட்டால் நாம் பரிசுத்தமாகுவதில்லை................ அவ்வாறு நம்மை பரிசுத்தப்படுத்தும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு நாம் கீழ்ப்படிந்து எதை குறித்தும் கவலை கொள்ளாமல் கிறிஸ்து இயேசுவுக்குள் சந்தோஷமாய் என்றென்றும் நாம் தங்கி இருப்போமாக ....ஆமென்