VEDHAGAMAM DOT COM

006. Book of Romans Ch 1:8-17 Gospel to Christians? Why? Tamil Christian Message 2021


Listen Later

முதலாவது, திருச்சபை கூடுகையில் கலந்துகொள்ளும் அனைவரும் இரட்சிக்கப்பட்டிருப்பார்கள்  என சொல்ல முடியாது. வெவ்வேறு காரணங்களுக்காக ஆராதனைக்கு வரும் இரட்சிக்கப்படாத நபர்கள் எல்லா திருச்சபைகளிலும் இருப்பார்கள். அவர்களுக்கு நற்செய்தி தொடர்ந்து அறிவிக்கப்பட வேண்டும்.

இரண்டாவது, அடிப்படை நற்செய்தியை இன்னும் முழுமையாக புரிந்துகொள்ளாத நபர்கள் திருச்சபைகளில் இருப்பார்கள். அவர்களுக்கு நற்செய்தி தெளிவுபடுத்தப்பட வேண்டும். நாம் எல்லாரும் ஒரு குறிப்பிட்ட சூழலில் இரட்சிக்கப்படுகிறோம். ஆனால் முழுமையாக நற்செய்தியின் சாரம்சத்தை புரிந்துகொண்ட பிறகுதான் கிறுஸ்துவை ஏற்றுக்கொண்டோமா என்றால் இல்லை. நற்செய்தியின் மைய சாராம்சம் எல்லா கிறிஸ்தவர்களுக்கும் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

மூன்றாவது, இதுதான் மிக முக்கியமானது, அடிப்படை நற்செய்தியை ஏற்றுக்கொண்டுவிட்ட நபர்களுக்கு நற்செய்தியின் முழுமை அறிவிக்கப்பட வேண்டும். அடிப்படை நற்செய்திக்கான ஒரு அளவுகோலாக அப்போஸ்தலர் விசுவாச பிரமாணத்தை கொள்ளமுடியும். ஆனால் முழுமையான நற்செய்தி அதையும் தாண்டி செல்கிறது.

...more
View all episodesView all episodes
Download on the App Store

VEDHAGAMAM DOT COMBy VEDHAGAMAM DOT COM