Tamil Poems | Blank Thoughts

10. நானறிந்த உண்மை | The Truth


Listen Later

"உண்மைகள்"

உங்களுக்குப் புரியாது.

அதுவும்

நான(ட)றிருந்த உண்மை

ஒன்றுண்டு --  அதில்

உங்கள்

மனம்என்றும் ஒப்பாது.

"போலிகள்"

உங்களுக்குப் புரியும்.

ஏனெனில்

அதன்வடிவில் உங்களை

நீங்களே

பார்த்துக் கொள்ளலாம்.

நானறிந்த உண்மை

ஒன்றுண்டு.

உங்களுக்குக் கூறுகின்றேன்,

உங்களுக்காகவே வாழ்கின்றேனென்று

வாரிசுருட்டிய தலைவர்களை

எண்ணி ஏமாந்தநீங்கள்,

உங்கள்

மனதை மலர்என்று

எண்ணி எளிதில் மயங்கிவிடுகிறீர்கள்,

உங்கள்

இதயத்தில் குருதியோட்டம்

உண்டென்று நம்புகிறநான்,

உண்மைகளை உணருங்களென்கிறேன்.

எழுச்சியை எழுப்ப வேண்டாம்

முதலில்

நீங்கள் எழுந்து நில்லுங்கள்.

விழிப்பாயிருந்து

உறங்கும் உணர்வுகளை

தட்டியெழுப்புங்கள்.

முதலில் நாம்நல்நடை

பயில்வோம் - பின்

நாடே நடக்கும்

நம் பின்னே!

...more
View all episodesView all episodes
Download on the App Store

Tamil Poems | Blank ThoughtsBy Sumathy Gnanasegar