Tamil Poems | Blank Thoughts

11. இயற்கையின் ஈர்ப்பு | Nature


Listen Later

நாம் பிறந்தபோது

பசித்தபோது

நம்தாய் நம்மை

அள்ளிஅணைத்தபோது

நம் பொன்னான

வாழ்நாட்களில்

தவழ்ந்து நடந்தபோது

தடுக்கிவிழுந்து எழுந்தபோது

உடன்பிறப்புகளோடு உறவாடியபோது

பள்ளியில் படிக்கச்சென்ற

பசுமையான பொன்நாட்களில்

வாலிபப் பருவத்தின்போது

அன்பான உறவுகள்

நம்முடன் வாழ்ந்தபோது

எதிலும் நாட்டமின்றி

நாட்களை நகர்த்தியபோதும்

மலராத……..மனம்……

நம் பாரதத் தாயின்சுவாசத்தையும்

அவள் நமக்களித்த வான்கூரையையும்

புல்மெத்தையையும் பறவைநண்பர்களையும்

மலை, கானக, மழைநூல்களையும்

காணும்போது மலர்வதே

இயற்கையின் ஈர்ப்பு.

...more
View all episodesView all episodes
Download on the App Store

Tamil Poems | Blank ThoughtsBy Sumathy Gnanasegar