
Sign up to save your podcasts
Or


புதியதோர் உலகம் உருவாகுகின்றது!
புத்திமான்கள்
புல்லுருவிகளால் புதைக்கப்படுகின்றார்கள்!
இப்புதிய உலகஅமைப்பில் சிலமனிதர்கள்
இரக்கமற்றவர்கள்!
அகந்தை யெனும் ஆழப்புதைந்த,
ஆயிரமாயிரம்
ஆண்டுகளாய் அகிலத்தை அழித்துவரும்
விஷவேரினால்
விவேகத்தைப் பறிகொடுத்து நல்லபண்புகளை விலக்கி வரும்
விடிவெள்ளி போன்ற விந்தைமனிதர்களை
எரிக்கும் கொழுந்தீச்சுடர்கள்!
தன்பாரத்தை சுமக்க இயலாதசில
தன்னலப்பிறவிகள்
தன்மையுள்ளங்களில் நெருப்பைஅள்ளித்
தெளிக்கின்றன.
உருவாகிக் கொண்டிருக்கும் இந்தப்புதிய
உலகத்தில்
உண்மைகள் வாழமுடியாது உருகுலைந்துபோகிறது.
உண்மை உள்ளங்கள் பிறக்கமுடியாது
தவிக்கின்றன.
By Sumathy Gnanasegarபுதியதோர் உலகம் உருவாகுகின்றது!
புத்திமான்கள்
புல்லுருவிகளால் புதைக்கப்படுகின்றார்கள்!
இப்புதிய உலகஅமைப்பில் சிலமனிதர்கள்
இரக்கமற்றவர்கள்!
அகந்தை யெனும் ஆழப்புதைந்த,
ஆயிரமாயிரம்
ஆண்டுகளாய் அகிலத்தை அழித்துவரும்
விஷவேரினால்
விவேகத்தைப் பறிகொடுத்து நல்லபண்புகளை விலக்கி வரும்
விடிவெள்ளி போன்ற விந்தைமனிதர்களை
எரிக்கும் கொழுந்தீச்சுடர்கள்!
தன்பாரத்தை சுமக்க இயலாதசில
தன்னலப்பிறவிகள்
தன்மையுள்ளங்களில் நெருப்பைஅள்ளித்
தெளிக்கின்றன.
உருவாகிக் கொண்டிருக்கும் இந்தப்புதிய
உலகத்தில்
உண்மைகள் வாழமுடியாது உருகுலைந்துபோகிறது.
உண்மை உள்ளங்கள் பிறக்கமுடியாது
தவிக்கின்றன.