Tamil Poems | Blank Thoughts

14. நேரமும் நாமும் | We are Time


Listen Later

உலகமே உறங்கும்,

உறங்காது  காலம்!

பொழுது விடியும்,

கடல் ஆனந்தத்துடன் கொந்தளிக்கும்,

முடிவற்றஉலகின் எல்லை

விரிந்த கடற்கரையில்

குழந்தைகள் விளையாடும்,

உறங்காது காலம்!

வழியற்ற விண்ணில்,

புயல் அலையும்

பாதையற்ற கடலில்

கப்பல்கள்

சென்று கொண்டிருக்கும் ;

உறங்காது காலம்!

ஓய்வுகொள்ளாதது காலம்!

பகல் முடியும், பறவைகளின்

பாடல்கள் அடங்கும்,

காற்று களைத்துஅயரும்,

கனத்த இருள்திரை

நம்மேல் வீசப்படும்,

பூமி உறக்கப்போர்வையால்

மூடி வைக்கப்படும் - ஆனால்

உறங்காது காலம்!

நாம் இன்பப்பாடல்கள்

பாடி ,விளையாடி, உழைத்து,

சிரித்து,பேசிமுடித்தும்

உறங்கவில்லை காலம்!

சிறந்து விளங்கும்செல்வந்தனுக்கு….

நல்ல நேரம்.

கவலை மொத்தத்தையும்

குத்தகைக்கு எடுத்து

துன்பத்தில் துடிப்பவனுக்கு…..

அவன் நேரம்!

அவர்களுக்காகவும்

உறங்காது காலம்!

நாம்


...more
View all episodesView all episodes
Download on the App Store

Tamil Poems | Blank ThoughtsBy Sumathy Gnanasegar