
Sign up to save your podcasts
Or


அள்ளி அணைத்தஅன்னை
இன்று இல்லை.
அழுகுரல்கேட்டு ஆறுதல்சொன்ன
அன்னை இங்கில்லை!
கண்ணில் பிறந்துவழிந்த
கண்ணீரனைத்தும் இன்று
தீர்ந்துபோய்விட்டது!
இதயத்துடிப்பே இதமாகஇல்லை!
வீடு இருண்டிருக்கிறது,
விளக்கேற்ற ஆர்வமில்லை.
காற்று நின்றதை,
கனவு கலைந்ததை,
கனத்த மனசுஏற்கவில்லை!
நிலவைக் காணவில்லை
வானம் இருண்டுகிடக்கிறது,
நிழல்கிடைக்கவில்லை - மேகம்
வெளுத்துக்கிடக்கிறது!
சோலையும் காய்ந்துவிட்டது!
அழுவதற்கு இனிஅன்னை
மடியில்லை - நேரில்
தொழுவதற்கினி தாயுமில்லை.
எதிர்காலத்தை இருளேசூழ்ந்தது
போலொரு உணர்வு!
வேங்கை எனைஅடித்து
வதைப்பதைப் போன்றதொரு
பிரமை!
நெருப்பில் என்னுயிர்
வீழ்ந்தது போன்றதொரு
உணர்வு!
தாயை இழந்த என்போன்ற
விவரமறிந்த பேதைகளுக்கு
துயரப் பிணியிலிருந்துமீள
மாற்று மருந்துண்டோ?
கேள்வியைத் தான்நான்
கேட்கிறேன் - ஆனால்
அதற்கோர் பதிலைச்
சொல்லதான் பண்டிதரில்லை.
By Sumathy Gnanasegarஅள்ளி அணைத்தஅன்னை
இன்று இல்லை.
அழுகுரல்கேட்டு ஆறுதல்சொன்ன
அன்னை இங்கில்லை!
கண்ணில் பிறந்துவழிந்த
கண்ணீரனைத்தும் இன்று
தீர்ந்துபோய்விட்டது!
இதயத்துடிப்பே இதமாகஇல்லை!
வீடு இருண்டிருக்கிறது,
விளக்கேற்ற ஆர்வமில்லை.
காற்று நின்றதை,
கனவு கலைந்ததை,
கனத்த மனசுஏற்கவில்லை!
நிலவைக் காணவில்லை
வானம் இருண்டுகிடக்கிறது,
நிழல்கிடைக்கவில்லை - மேகம்
வெளுத்துக்கிடக்கிறது!
சோலையும் காய்ந்துவிட்டது!
அழுவதற்கு இனிஅன்னை
மடியில்லை - நேரில்
தொழுவதற்கினி தாயுமில்லை.
எதிர்காலத்தை இருளேசூழ்ந்தது
போலொரு உணர்வு!
வேங்கை எனைஅடித்து
வதைப்பதைப் போன்றதொரு
பிரமை!
நெருப்பில் என்னுயிர்
வீழ்ந்தது போன்றதொரு
உணர்வு!
தாயை இழந்த என்போன்ற
விவரமறிந்த பேதைகளுக்கு
துயரப் பிணியிலிருந்துமீள
மாற்று மருந்துண்டோ?
கேள்வியைத் தான்நான்
கேட்கிறேன் - ஆனால்
அதற்கோர் பதிலைச்
சொல்லதான் பண்டிதரில்லை.