Tamil Poems | Blank Thoughts

20. தேவர்கள் | Gods


Listen Later

இரவுகடந்தால் தேவர்கள் தேவலோகத்தில்தான்

இருக்கவேண்டும் - இதுநியதி

அந்நேரம் அவர்களின் கட்டாயகாலம்!

கையூட்டு வாங்கி முடிந்தால்

கையேந்தாப் பிச்சைக்காரர்களாக  தங்கள்

கைலாயம் போன்ற மாளிகையில்

பணத்தை எண்ணிக் கொண்டிருப்பார்கள்

இதுஇவர்களின் - உலகநியதி

அந்நேரம் ஏழைகளின் துயரகாலம்,

வாங்கியவர்களுக்கோ வசந்தகாலம்.

ஆ……! யார்?     யார் பார்வை?

ஆவல் பொங்க நோக்கினேன்.

அதுவிண்ணில் முழுநிலா பவனிவரும்

அற்பக் கதிர்மறையும் காலம்!

தாக்கிற்று மின்னல் ஒளிக்கீற்று!

ஒளியா அது? அல்ல கண்ணொளி!

வெள்ளைப் புறாவாக இறக்கையுடன்

வெண்ணீராடையுடன் - இவர்களை

அவர்களை….. எங்கோ….. கண்டுள்ளேன்!

ஆம்! அவர்கள் இரக்கமுள்ளஇதயம்

எங்குள்ளதோ அங்கு தஞ்சம்


...more
View all episodesView all episodes
Download on the App Store

Tamil Poems | Blank ThoughtsBy Sumathy Gnanasegar