Tamil Poems | Blank Thoughts

27. கருப்பின் நிறம் வெள்ளை | Black Lives Matter


Listen Later

காலங்கள் கவலைகளாகிய இந்நேரத்தில்

கழுத்தை நெரிக்கும் காட்சிகள் எதற்கு?

காலத்தின் கோலத்தில் குலப்போராட்டம் ஏன்?

பாவிகள்கூடி அப்பாவிகளை அடிக்கிறார்களா?

அப்பாவிகளெல்லாம் கூடி பாவிகளாகிறார்களா?

பார்வையாளர்களுக்கு இது புரியவில்லை!

பிறருக்காக தன்னை துன்புறுத்திக்கொண்டவரெல்லாம்

நாம் காணாத சரித்திரத்தில்….

பிறரைத் துன்புறுத்துபவர்களோ தினம்

நம்வீட்டுச் சின்னத்திரையில்….

ஆடுமாடுகளில் நிறம்பார்க்காத மனிதன்!

கருப்பன் மடியில் வெள்ளைப்பூனை;

வெள்ளையன் வீட்டில் ப்ளாக்நார்வீஜன்!

விலங்கிடம் நிறமற்ற விளங்காத

அன்பு காட்டும் இவன்

நிறம்கொண்டு குலம் கண்டு நாட்டைப்பிளப்பதேன்?


...more
View all episodesView all episodes
Download on the App Store

Tamil Poems | Blank ThoughtsBy Sumathy Gnanasegar