
Sign up to save your podcasts
Or


மணக்கும் மணம்தந்து
மனிதனிடமுள்ள நாற்றங்களை
மணக்க விடாமல்தடுத்து
நறுமணத்தை அளிக்க
முயற்சிக்கும் முட்டாள்-மலர்
வாடிய அடுத்தகணம்
வீசியெறியப் படுவோம்
என்பதை மறந்திருக்கிறது!
காலமெல்லாம் பூமாதேவி
கல்லுடலில் பெற்றிருக்கும்
கற்களையும் முற்களையும்
கல்லாலடிக்க வேண்டிய
அசுத்தங்களிடமிருந்தும்
நம்மை பிரித்து, காலால்
நம்மை சுத்தர்களாக்க
முயற்சிக்கும் முட்டாள்-காலணி
காலில் போட்டுமிதித்தும்
வலி தாங்குகிறது.
களைத்தவன் கண்கலங்க
வெயிலின் வெப்பத்தால்
வறண்ட அவன்
தொண்டைக்கு இதம்
தரத்துணிந்து,
தான் தஞ்சம்புகுந்த
இடத்தைவிட்டு
இடம் பெயர்ந்து
அவன் அயற்சியைநீக்கி,
அவன் தாகத்தைதணித்து,
தான்காய்ந்து போகும்முட்டாள்-இளநீர்
குளிர்ச்சி தணிந்தவுடன் - தான்
குப்பைத்தொட்டியில் என்பதை
தெரிந்தும் தெளிந்திருக்கிறது.
இம்மூன்றையும் அறிந்து
அனுபவிப்பவனே முழுஞானி!
By Sumathy Gnanasegarமணக்கும் மணம்தந்து
மனிதனிடமுள்ள நாற்றங்களை
மணக்க விடாமல்தடுத்து
நறுமணத்தை அளிக்க
முயற்சிக்கும் முட்டாள்-மலர்
வாடிய அடுத்தகணம்
வீசியெறியப் படுவோம்
என்பதை மறந்திருக்கிறது!
காலமெல்லாம் பூமாதேவி
கல்லுடலில் பெற்றிருக்கும்
கற்களையும் முற்களையும்
கல்லாலடிக்க வேண்டிய
அசுத்தங்களிடமிருந்தும்
நம்மை பிரித்து, காலால்
நம்மை சுத்தர்களாக்க
முயற்சிக்கும் முட்டாள்-காலணி
காலில் போட்டுமிதித்தும்
வலி தாங்குகிறது.
களைத்தவன் கண்கலங்க
வெயிலின் வெப்பத்தால்
வறண்ட அவன்
தொண்டைக்கு இதம்
தரத்துணிந்து,
தான் தஞ்சம்புகுந்த
இடத்தைவிட்டு
இடம் பெயர்ந்து
அவன் அயற்சியைநீக்கி,
அவன் தாகத்தைதணித்து,
தான்காய்ந்து போகும்முட்டாள்-இளநீர்
குளிர்ச்சி தணிந்தவுடன் - தான்
குப்பைத்தொட்டியில் என்பதை
தெரிந்தும் தெளிந்திருக்கிறது.
இம்மூன்றையும் அறிந்து
அனுபவிப்பவனே முழுஞானி!