Tamil Poems | Blank Thoughts

28. முட்டாள்களா முழுஞானிகளா | Fool or Scholar


Listen Later

மணக்கும் மணம்தந்து

மனிதனிடமுள்ள நாற்றங்களை

மணக்க விடாமல்தடுத்து

நறுமணத்தை அளிக்க

முயற்சிக்கும் முட்டாள்-மலர்

வாடிய அடுத்தகணம்

வீசியெறியப் படுவோம்

என்பதை மறந்திருக்கிறது!

காலமெல்லாம் பூமாதேவி

கல்லுடலில் பெற்றிருக்கும்

கற்களையும் முற்களையும்

கல்லாலடிக்க வேண்டிய

அசுத்தங்களிடமிருந்தும்

நம்மை பிரித்து, காலால்

நம்மை சுத்தர்களாக்க

முயற்சிக்கும் முட்டாள்-காலணி

காலில் போட்டுமிதித்தும்

வலி தாங்குகிறது.

களைத்தவன் கண்கலங்க

வெயிலின் வெப்பத்தால்

வறண்ட அவன்

தொண்டைக்கு இதம்

தரத்துணிந்து,

தான் தஞ்சம்புகுந்த

இடத்தைவிட்டு

இடம் பெயர்ந்து

அவன் அயற்சியைநீக்கி,

அவன் தாகத்தைதணித்து,

தான்காய்ந்து போகும்முட்டாள்-இளநீர்

குளிர்ச்சி தணிந்தவுடன் - தான்

குப்பைத்தொட்டியில் என்பதை

தெரிந்தும் தெளிந்திருக்கிறது.

இம்மூன்றையும் அறிந்து

அனுபவிப்பவனே முழுஞானி!

...more
View all episodesView all episodes
Download on the App Store

Tamil Poems | Blank ThoughtsBy Sumathy Gnanasegar