Tamil Poems | Blank Thoughts

37. படிக்காத பேசும் பதுமைகள் | Ignorant Speeches


Listen Later

பதுமைகள்பல கண்டேன்

பாசம்தான் அங்குண்டு,

படிப்புஎன்று ஒன்றுமில்லைஅங்கு!

புதுமைகள்பல செய்தன

சமையல்கட்டில்!

புத்திதான் அங்கில்லை!

புன்னகைகள் பலகண்டேன்,

புளங்காங்கிதம் எனக்கில்லை.

வாய்ப்பேச்சைக் கேட்டு களித்தேன்,

வலிமைஒன்றும் அங்கில்லை!

வாழ்க்கை அங்குண்டு-அந்த

வஞ்சியர்தம் மனதில்…

கல்யாணக் கோலமொன்றே-அவர்தம்

கற்பனைக் கனவுகள்.

கலங்காத நெஞ்சமென்பது-அந்தக்

கன்னியர்க்கொரு கானல்நீர்!

நாயகனை நேசிக்கத்துணியும்-அந்த

நங்கையர்தம் உள்ளத்தில்

தாயகத்திற்கோர் இடமென்பது-சென்னை

தாகத்திற்கு தண்ணீர்தேடுவதுதான்.

பெற்றவரிடம் தட்சணைபெறும்-அந்தப்

பெண்மணிகள் பணப்பீரோக்கள்.

சாவிக்காக வருபவனிடம்-அந்தச்

சாவித்திரிபோல் வாழ்பவர்கள்!

பீரோ காலியானால்-அவர்தம்



...more
View all episodesView all episodes
Download on the App Store

Tamil Poems | Blank ThoughtsBy Sumathy Gnanasegar