Tamil Poems | Blank Thoughts

38. இது என் குற்றமல்ல | Not Guilty


Listen Later

இன்று புயலென்று

வானொலி அறிக்கை

அறிவித்தது!

டெலிவிஷனும் அதைதான்

தெரிவித்தது.

ஆரம்பித்த சூறைக்காற்று

அசைத்தது அனைத்தையும்!

மரம்ஆடி நின்றது.

செடிஒடிந்து நின்றது.

பொலபொலவென

கொட்டித்தீர்த்தது மழை!

காக்கையும் குருவியும்

காணாமல்போய் விட்டது!

மலர்கள் மொத்தமும்

மல்லாந்து கிடந்தனதரையில்!

இரவும் கடந்தது!

புயலும் கடந்தது!

மழையும் ஓய்ந்தது!

பொழுது புலரும்வேளையில்

கொஞ்சும் குயில்

கூ கூ என்றது!

கூடவே கடமுடாவென

இடியும் இடித்தது!

எம்வீட்டு நாயும்

எதற்கோ கத்தியது.

மழை தொடருமா?

என்னவென்று

எட்டிப் பார்த்தால்நான்

தட்டிக் கேட்பதாய்

தவளை தன்குரலை

உயர்த்தியது!

குற்றவாளி நானல்ல…..

மழைதான் மறுபடியும்!

...more
View all episodesView all episodes
Download on the App Store

Tamil Poems | Blank ThoughtsBy Sumathy Gnanasegar