Tamil Poems | Blank Thoughts

4. தனிமை | Loneliness


Listen Later

தனிமை

தனிமை யாருக்கு

சொந்தமானது?

நாம் பூமியில் ஜனித்த

அக்கணமே

நமக்கு சொந்தமானது.

இந்த தனிமை

நாம் தவழ்ந்து நடக்க

தவித்த போதே நமக்கு சொந்தமானது.

உறவுகளும் உற்ற நண்பர்களும் - நம்

உறக்கத்தை கலைத்தபோதே

நம்மோடு துணையாகிப்போனது.

அன்பிற்காக

பாசபந்த அணைப்புகளுக்காக அலையும்போதே ஆறுதல் அளிப்பதும் தனிமைதான்.

சில போலிகளை உண்மைகளென்று நம்பினதிற்கு காரணமும் - இந்த தனிமைதான்.

உண்மைகளை உணர்ந்து உள்ளமுடைந்து

கண்ணீர்விடும் போதும் துணையானது

இதேதனிமைதான்.

கண்பார்வை படிப்படியாக

பறிக்கப்பட்டு

பார்வையிழக்கும்போதும்

துணையாகபோவது - இந்த

தனிமைதான்-ஆனால்

அப்போது அந்த வயோதிக தனிமை நமக்குத்

தனிமையாயிராது - ஏனெனில் இருளில்

தனிமையின் கொடுமையைதான்

ஏற்கனவே  நாம் அன்னையின்

அடிவயிற்றில் பல மாதங்கள் அனுபவித்துவிட்டுதானே

வந்தோம்!


Visit : http://www.sumathygsmy.in/

...more
View all episodesView all episodes
Download on the App Store

Tamil Poems | Blank ThoughtsBy Sumathy Gnanasegar