Tamil Poems | Blank Thoughts

41. தெளிவான தெய்வீகம் | DIVINITY


Listen Later

வானத்தையே நாம்ஆசையாக கேட்கவில்லை, வானம்பார்த்தபூமியில் இடமும் கேட்கவில்லை.

செல்வங்கள் தேவைஎனஎதிர்நோக்கவில்லை,

செழிப்பான வாழ்வையும் எதிர்நோக்கவில்லை!

ஏழையாகவும் வாழவிரும்பி வேண்டியதில்லை,

கோழையாகவும் வாழவிரும்பி யதில்லை!

ஆயிரம்மொழிகள் கற்கஆசை கொள்ளவில்லை,

அற்புதமான தமிழே திருப்திதந்தது!

ஆசைகளை வளர்த்துக் கொள்ளவில்லை,

ஆசாபாசங்க ளிலும்அலை மோதுவதுதில்லை.

அமைதியான வாழ்வுதனையே வேண்டினோம்,

அருமையான மனமொன்றையே தேடினோம்!

காலம்மாறினாலும் நமக்குகிட்டிய ஞானம்

கரைந்து போகக்கூடாது என்றேகதறினோம்.

பற்றற்ற ரோகநிலையைக் கடந்தஇந்தப்

பற்றுகோளான வேண்டுதல்களையே கேட்டோம்!

எதிர்பார்ப்புகளை என்றும் எரித்துவிடாத

ஏமாற்றங்களல்லாத வாழ்வே தேடினோம்!

செத்தபின் நம்முயிர் சேர்வதெங்கேஎனத்

தெரியும்வரை தெய்வத்தைதேடி நிற்போம்!


...more
View all episodesView all episodes
Download on the App Store

Tamil Poems | Blank ThoughtsBy Sumathy Gnanasegar